Saturday 30 January 2016

2.வெள்ளை நுண் மணற்கொண்டு...

2. வெள்ளை நுண் மணற்கொண்டு...

பாடல் :2
வெள்ளை நுண் மணற்கொண்டு தெருவணிந்து
வெள்வரைப் பதன்முன்னம் துறைபடிந்து
முள்ளுமில் லாச்சுள்ளி யெரிமடுத்து
முயன்றுன்னை நோற்கின்றேன் காமதேவா,
கள்ளவிழ் பூங்கணை தொடுத்துக்கொண்டு
கடல்வண்ண னென்பதோர் பேரெழுதி,
புள்ளினை வாய்பிளந் தானென்பதோர்
இலக்கினிற் புகவென்னை யெய்கிற்றியே.

விளக்கம் :
வெள்ளை நுண் மணல் கொண்டு  - வெள்ளை நிறக் கோலப்பொடி கொண்டு
வெள்வரைப் பதன் முன்னம் - வெள்ளென வெளிச்சம் வருவதற்கு முன்பே
துறைபடிந்து - குளத்தில் இருக்கும் படித்துறை சென்று
முள்ளுமில்லாச் சுள்ளி எரிமடுத்து -- முட்களற்ற மரக் குச்சிகள் எடுத்து
முயன்று உன்னை - முயன்று உன்னை
நோற்கின்றேன் காம தேவா - நோன்பு இருக்கிறேன் காமதேவா
கள் அவிழ் - தேன் வடியும்
பூங்கணை - பூக்களால் செய்யப்பட்ட  அம்பு தொடுத்துக் கொண்டு
கடல்வண்ணன் என்பதோர் பேரெழுதி -  கடலின் நிறம் கொண்ட நீல வண்ணன் பெயரெழுதி
புள்ளினை வாய் பிளந்தான் என்பதோர் -பகாசுரன் என்ற அரக்கன் கொக்கு (புள் ) வடிவம் எடுத்து வந்தபோது அவ்வரக்கன் வாய் பிளந்தவன் மீது
இலக்கினிற் புகவென்னை - இலக்கு வைத்து என்னை அவன் மேல்
யெய்கிற்றியே. - எய்து  விடேன்
Add caption
வெள்ளை நுண்மணல் கொண்டு என்பது வேறொன்றும் இல்லை வெள்ளைக் கோலப்பொடி தான்..எவ்வளவுக்கு எவ்வளவு அது நுண்ணிய மணலாக இருக்கோ அவ்வளவுக்கு அவ்வளவு கோலம் போட இலகுவாக இருக்கும்..கோலமும் அழகா வரும்.. அது வச்சு அழகா கோலம் போடுறப்ப தெருவுக்கே ஓர் அழகு வந்துடும்.
நன்றி :கூகுல் 

அதைத் தான் தெருவணிந்து என்கிறார் முதலிரண்டு பாடல்களிலும்.. தெருவுக்கு அழகான கோலத்தை அணிவித்தல்..வெளிச்சம்  வரும் முன்னம் வெள்ளெனக் குளிச்சு அதுவும் எங்க..? அக்காலத்தில் குளத்தில் குளிப்பது வழக்கம்..குளத்தின் படிகளை படித்துறை என்பது வழக்கம்..அங்கே சென்று குளிச்சுட்டு , முட்களற்ற சுள்ளி ... இன்னமும் சுள்ளி பொறுக்குதல் கிராமத்தில் வழக்கில் உள்ள பேச்சு..அப்படியான சுள்ளிகள் (மரத்தில் இருந்து விழுந்து இருக்கும் சின்னச் சின்ன உடைந்த  குச்சிகள் எடுத்து எரிச்சு தீ வளர்த்து வேள்வி செய்து,  காமதேவா உன்னை நோற்கின்றேன்..(நோன்பு இருத்தல் ) வேள்விகள் எப்பெண்ணாவது செய்வாளா..ஆனால் கோதை செய்கிறாள்..கண்ணனைச் சேர எதையும் செய்யத் துணிகிறாள்.. )
தேன் வடியும் பூக்களால் செய்யப்பட்ட கணைகள் கொண்டு ,தொடுத்து ,அதில் கடல் வண்ணம் கொண்ட நீல வண்ணனின் பெயர் எழுதி ,

கொக்கு வடிவில் வந்த அரக்கனின் வாய் பிளந்தவன் மார்பினை,  இலக்காகக் கொண்டு அடையுமாறு அதிலே என்னையும் வைத்து எய்து விடேன்..
எப்ப்ப்ப்பூடி ...ஆண்டாள் ஆசைப்பட்ட மாதிரி பேர் எழுதியாச்சு :))
இதை படிக்கும் போதே ஒரு சன்னமான குரல் கொண்டு படிச்சுப் பாருங்களேன்..
இப்படி ஓர் ஏக்கமான பாவனை கண் முன் எழும் :) இந்தப் பாடல் படிக்கிறப்ப
காதல் ஓவியம் என்ற திரைப்பாட்டில் ,
"தாங்குமோ என் தேகமே..
மன்மதனின் மலர்க்கணைகள் தோள்களிலே..வரிகள் நினைவுக்கு வந்தது..காமன் அம்புகள் அவ்வளவு சக்தி வாய்ந்தவை என்பதால்தான் கோதை காமனிடம் முறையிடுகிறாள் :) 

2 comments:

  1. உங்கள் பதிவுகளைப் படிக்கத் துவங்கியிருக்கிறேன். மிக நன்றாக சொல்லியிருக்கிறீர்கள்.

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி :) தொடர்ந்து வாசியுங்கள்..ஆண்டாளின் காதல், கோதைத் தமிழ் அனைவரிடமும் சென்று சேர்வதே எனது விருப்பம் :)

      Delete

மறுமொழி இடுக!