Wednesday 2 August 2017

பெரியாழ்வார் திருமொழி 03.08.09

பாடல் : 09

வெண்ணிறத் தோய்தயிர் தன்னை
வெள்வரைப் பின்முன் எழுந்து
கண்ணுறங் காதே யிருந்து
கடையவும் தான்வல்லள் கொலோ
ஒண்ணிறத் தாமரைச் செங்கண்
உலகளந் தான்என் மகளை
பண்ணறை யாப்பணி கொண்டு
பரிசற ஆண்டிடுங் கொலோ.

விளக்கம் :

வெண்ணிறத் தோய்தயிர் தன்னை - வெண்மை நிறம் கொண்ட , தோய்த்த  தயிரை
வெள்வரைப் பின் முன் எழுந்து - வெள்ளி முளைத்த பின்  ,    கிழக்கு வெளுக்கும் முன்பதற்கு முன்னாக எழுந்து
கண் உறங்காதே இருந்து - தூங்காமல் இருந்து
கடையவும் தான் வல்லள் கொலோ - கடையவும் தான் வல்லமை பெற்றவளோ ?
ஒண் நிறத்  தாமரைச் செங்கண் உலகளந்தான் -ஒளிரும்   தாமரை போன்ற சிவந்த கண்களை உடைய உலகளந்தான்
என் மகளை பண் அறையாப் பணி கொண்டு - என் மகளைஇது போன்ற தகுதியற்ற வேலைகளைச் செய்யச்சொல்லி
பரிசு அற ஆண்டிடும் கொலோ - பெருமை கெடும் படி ஆள்வானோ ?

வெண்மை நிறம் கொண்ட , தோய்த்த  தயிரை ,(பால் தோய்த்து தயிர் ஆக்கி தயிர் தோய்த்து வெண்ணெய் ஆக்கி என்று வேலை பார்த்துக் கொண்டே இருக்கிறாள் ) வெள்ளி முளைத்த பின்னும் , சூரியன் உதிப்பதற்கு முன்னும் தூங்காமல் இருந்து இதே வேலையாகச் செய்வாளோ ?கடைந்து கொண்டே இருக்கும் வல்லமை பெற்றவளோ ?(என் பெண் அவ்வளவு வேலை செய்து பழக்கம் இல்லையே..வேலை செஞ்சு பழக்கம் இல்லாத பெண்ணை இடுப்பு ஒடிய வேலை வாங்கினா அவள் எப்படிச் செய்வாளோ ? )
ஒளிரும் தாமரை போன்ற சிவந்த கண்களை உடைய உலகளந்தான் , என் மகளை இது போன்ற சீரற்ற வேலை கொண்டு ,அவள் பெருமை கெடும் படி ஆள்வானோ?
 பரிசேலோர் எம் பாவாய் எனப் பாடின பெண் ஆயிற்றே !

1 comment:

  1. Congatulations for that beautiful article. I wish you
    all the best. You are a wonderful couple. I recomment you to visit Paxos & Antipaxos in Ionean Sea and Milos in Cyclades.

    ReplyDelete

மறுமொழி இடுக!