Wednesday 2 March 2016

27.நீரிலே நின்றயர்க்கின்றோம்

27.நீரிலே நின்றயர்க் கின்றோம் 
பாடல் :27
நீரிலே நின்றயர்க் கின்றோம்
நீதியல் லாதன செய்தாய்
ஊரகம் சாலவும் சேய்த்தால்
ஊழியெல் லாமுணர் வானே
ஆர்வ முனக்கே யுடையோம்
அம்மனை மார்காணி லொட்டார்
போர விடாயெங்கள் பட்டைப்
பூங்குருந் தேறியி ராதே

விளக்கம் :
நீரிலே நின்று அயர்க்கின்றோம்தண்ணீரிலேயே நின்றதில் அயர்ந்து விட்டோம்.
நீதி அல்லாதன செய்தாய் - இப்படி உன்னை விரும்புபவர்களை வாட்டியது நீதி அல்லவே அதைச் செய்து விட்டாயே
ஊரகம் சாலவும் சேய்த்தால் - இப்பொய்கையில் இருந்து நாங்கள் இருக்கும் கிராமம் மிகவும் தூரமானது
ஊழி எல்லாமும் உணர்வானே - விதி ,உலகத்தின் அழிவு,அதன் மீள் துவக்கம்  எல்லாம் உணர்ந்தவனே
ஆர்வம் உனக்கே உடையோம் - இது ஏதோ எங்களின் சின்னச் சின்ன ஆசைகள் மற்றபடி எங்கள் ஆர்வம் எல்லாமே உன்னிடம் மட்டுமே
அம்மனைமார் காணில் ஒட்டார் - இதை மட்டும் எங்க அம்மா அப்பா மாருங்க பார்த்தாங்க வீட்டுக்குள்ள எங்கள விடமாட்டாங்க
போர விடா எங்கள் பட்டைப்- மீள விடாய் எங்கள் பட்டை
 பூங்குருந்து ஏறி இராதே - பட்டாடைகளை எடுத்துக் கொண்டு பூங்குருந்த மரம் ஏறி அமர்ந்து கொண்டு இராதே

ஆடையின்றி நீரிலேயே வெகு நேரம் நின்றதால் கால்கள் அயர்ந்து விட்டனவாம்..அயற்சி அல்ல அயர்ச்சி..அசந்து போதல் என்று இன்னமும் (அசதி ) என இன்னமும் பேச்சு வழக்கில் இருக்கு இச்சொல்..getting tired ..
உன்னை விரும்புபவர்களை இப்படி வாட்டியது நீதி அல்லவே அதைச் செய்து விட்டாயே


இப்பொய்கையில் இருந்து எங்கள் கிராமமானது வெகு தூரத்தில் இருக்கின்றது. விதி, உலகத்தின் அழிவு மற்றும் அதன் மீள் துவக்கம் அனைத்தும் அறிந்து அவற்றை உணர்ந்த வல்லவனே (ஊழி முதல்வனே என்று திருப்பாவையிலும் குறிப்பிடுகின்றாள் )



இப்படிக்  குளத்தில் நீராடுவது, மணல் வீடு கட்டுவது எல்லாம் எங்களோட சின்னச் சின்ன ஆசை..இதனால உன்னை மறந்துட்டதா பொருள் கிடையாது..அப்படி நினைச்சு கோபம் கொள்ளாதே. எங்கள் ஆர்வம் எல்லாமே உன் மீதுதான்..
அம்மன் +ஐ மார் = எங்கள் அம்மா அப்பா இதைப் பார்த்தாங்க எங்கள இனி இங்க விடவே மாட்டாங்க.
போர விடாய் எங்கள் பட்டை - மீள விடாய் எங்கள் பட்டை..எங்கள் கைக்கு எட்டுமாறு எங்கள் பட்டை கீழே விடு..பட்டாடைகளை எடுத்துக் கொண்டு பூங்குருந்த மரம் ஏறி அமர்ந்து கொள்ளாதே..

No comments:

Post a Comment

மறுமொழி இடுக!