Sunday 20 March 2016

30.கன்னியரோடெங்கள் நம்பி

30.கன்னியரோ டெங்கள் நம்பி 
பாடல் :30
கன்னிய ரோடெங்கள் நம்பி
கரிய பிரான்விளை யாட்டை
பொன்னியல் மாடங்கள் சூழ்ந்த
புதுவையர் கோன்பட்டன் கோதை
இன்னிசை யால்சொன்ன மாலை
ஈரைந்தும் வல்லவர் தாம்போய்
மன்னிய மாதவ னோடு
வைகுந்தம் புக்கிருப் பாரே

விளக்கம் :

கன்னியரோடு எங்கள் நம்பி - கன்னியர்களோடு எங்கள் நம்பி நாராயணன்
கரியபிரான் விளையாட்டை  - கருமை நிறக் கண்ணன் விளையாட்டை
பொன்னியல் மாடங்கள் சூழ்ந்த - பொன்வேய்ந்த மாடங்கள் சூழ்ந்த
புதுவையர் கோன் பட்டன் கோதை - வில்லி புத்தூர் தலைவன் பட்டன் (பெரியாழ்வார் ) கோதை
இன்னிசையால் சொன்ன மாலை - இன்னிசையால் பாடிய இந்தப் பாமாலை
இரு ஐந்தும் வல்லவர் தாம் போய் - பத்தும் பாடும் வல்லவர்கள்
மன்னிய மாதவனோடு - என்றும் நிலைபெற்ற மாதவனோடு
வைகுந்தம் புக்கிருப்பாரே -வைகுந்தம் புகுந்து இருப்பாரே

கன்னிப் பெண்களோடு எங்கள் நம்பி நாராயணன் ,கருமை நிறப் பெருமாள் கண்ணன் விளையாடிய இந்த விளையாட்டை , பொன் வேய்ந்த மாடங்கள் சூழ்ந்த வில்லிபுத்தூர் தலைவன் பட்டன் பெரியாழ்வார் மகள் கோதை ,

இன்னிசையால் சொன்ன இந்தப் பாமாலை பத்தையும் பாடுபவர்கள் ,என்றென்றும் நிலை பெற்ற மாதவனோடு வைகுந்தம் புகுந்து அங்கேயே இருப்பரே
ஏதோ இவர் கடவுள் என்றெல்லாம் கண்ணனை அந்நியப்படுத்தாமல் ,தங்களில் ஒருவனாக பாவித்து ,அவன் குறும்புகளில் செல்லச் சலிப்பும் கொண்டு பாடிய இந்தப் பத்துப் பாடல்கள் படிக்கவே இனிமையானவை..

நாச்சியார் திருமொழி மூன்றாம் பத்து இனிதே நிறைவுற்றது :) 



No comments:

Post a Comment

மறுமொழி இடுக!