Sunday 27 March 2016

32.காட்டில் வேங்கடம்


32.காட்டில் வேங்கடம் 
பாடல் :32
காட்டில் வேங்கடம் கண்ண புரநகர்
வாட்ட மின்றி மகிழ்ந்துறை வாமனன்
ஓட்ட ராவந்தென் கைப்பற்றி தன்னோடும்
கூட்டு மாகில்நீ கூடிடு கூடலே!

விளக்கம் : 
காட்டில் வேங்கடம் - காட்டில் உள்ள திருவேங்கட மலையிலும்
கண்ணபுர நகர் -  நகரத்தில் உள்ள கண்ணபுரத்திலும்
வாட்டமின்றி மகிழ்ந்துறை வாமனன் - எந்த வருத்தமுமின்றி மகிழ்ந்து குடி கொண்டுள்ள வாமன அவதாரம் எடுத்த கண்ணன்
ஓட்டரா வந்து என் கைப்பற்றி - ஓடி வந்து என் கைப்பற்றி
தன்னோடும் கூட்டுமாகில் - தன்னோடு என்னை அணைத்துக் கொள்வானாகில்
நீ கூடிடு கூடலே ! - நீ கூடிடு கூடலே !

காட்டில் உள்ள திருவேங்கட (திருப்பதி ) மலையிலும் ,நகரத்தில் உள்ள திருக்கண்ணபுரத்திலும் எந்த வருத்தமுமின்றி மகிழ்ந்து குடி கொண்டுள்ள வாமன அவதாரம் எடுத்த கண்ணன்


ஓடி வந்து என் கைப்பற்றி, தன்னோடு என்னை அணைத்துக் கொள்வார் என்றால்

நீ எனக்காக கூடிடு கூடலே!
காட்டிலும் இருக்கார்  நகரத்திலும் இருக்கார் எம் தலைவன்..என் அருகிலும் அவன் வேண்டும்என்னை அணைத்துக் கொள்ள நற்பொழுது கூட வேண்டும்.அது நடக்குமென்று நீ கூடிடு கூடலே என்று குறி கேட்கிறாள் கோதை :) ..அது ஏன் ஓடி வந்து அணைக்கணும் என்கிறாள் ? ஆமா ஏற்கனவே பருவத்தே பயிர் செய் என்பதை அந்த கண்ணன் இன்னும் உணரல நாளும் கிழமையும் காத்திருந்து காத்திருந்து கண்கள் பூத்துப் போச்சு..ஒருக் கணமும் தாழ்த்தாமல் ,  விரைவாக வந்தென்னை அணைத்தலே தன் காதல் நோய்க்கு மருந்து என்கிறாள்..


நாஞ் சொல்லல..?  இது ஏதோ பக்தி வீடு பேறு என்ற ஆன்மிகம் இல்லை முழுக்க முழுக்க கண்ணன் மீதான கோதையின் மையலும் காதலும் :) 

No comments:

Post a Comment

மறுமொழி இடுக!