Sunday 3 April 2016

33.பூம கன்புகழ் வானவர்

33.பூம கன்புகழ் வானவர்
பாடல் 33 :
பூம கன்புகழ் வானவர் போற்றுதற்
காம கன்அணி வாணுதல் தேவகி
மாம கன்மிகு சீர்வசு தேவர்தம்
கோம கன்வரில் கூடிடு கூடலே!

விளக்கம் :
பூமகன் புகழ் - பூவில் பிறந்த பிரம்மா புகழும்
வானவர் போற்றுதற் காமகன் - வானவர் போற்றுதற்கும் உரிய கா- மகன்  (காட்டு தெய்வமான திரு -மாலே (முல்லைத் தெய்வம்  )
அணி வாள் நுதல் -   ஒளிரும் அழகான  நெற்றி கொண்ட
தேவகி மாமகன் - தேவகியின் சிறந்த  மகன்
மிகு சீர் வசு தேவர்தம்  - மிகுந்த சீரும் சிறப்புமிக்க வசு தேவர் உடைய
கோ மகன் - தலைவன் (கோ -அரசன் )
வரில் - வருவார் எனில்
கூடிடு கூடலே - நீ கூடி விடு கூடலே !

பூவிலே பிறந்த பிரம்மாவும் புகழும் , வானவர் போற்றுதற்கும் உரிய காட்டிலுள்ள முல்லைத் தெய்வமான திருமாலும் , மிகவும் அழகான,   ஒளிரும்  நெற்றி கொண்ட தேவகியின்  சிறந்த மகன் , மிகுந்த சீரும் சிறப்புமிக்க புகழுடைய  வசுதேவரின் மகன்

 தலைவனான அந்தக் கண்ணன் வருவார் எனில் கூடிடு கூடலே!





No comments:

Post a Comment

மறுமொழி இடுக!