Monday 16 May 2016

40.பழகு நான்மறை யின்பொரு ளாய்மதம்

பழகு நான்மறை யின்பொரு ளாய்மதம்
பாடல் : 40
பழகு நான்மறை யின்பொரு ளாய்மதம்
ஒழுகு வாரண முய்ய வளித்தஎம்
அழக னாரணி யாய்ச்சியர் சிந்தையுள்
குழக னார்வரில் கூடிடு கூடலே
விளக்கம் :
 பழகு நான்மறையின் பொருளாய் - எல்லாருடைய பழக்கத்திலும் இருக்கும்  நான்கு வேதங்களின் உட்பொருளானவன்
மதம் ஒழுகு வாரணம் உய்ய அளித்த எம் அழகனார்  - மத நீர் ஒழுகும் யானையை வேதனையில் இருந்து உய்வித்தவன் (துன்பம் நீக்கியவன் ) எம் அழகனார்
 அணி ஆய்ச்சியர் சிந்தையுள் -  அழகு மிக்க ஆய்ச்சியர் சிந்தனையுள்
குழகனார் வரில் கூடிடு கூடலே ! - கலந்து குழைந்தவன் வருவார் எனில் கூடிடு கூடலே !

எல்லாருடைய பழக்கத்திலும் இருக்கும் நான்கு வேதங்களின் ஓம் என்ற பிரணவத்தின் உட்பொருளானவன் , மத நீர் ஒழுகிய யானையை அதன் வேதனையில் இருந்து துன்பம் நீக்கியவன்


எம் அழகனார் , அழகு மிக்க ஆய்ச்சியர் சிந்தனையுள் கலந்து குழைந்து இரங்குபவன் (இரங்குதல் - இரக்கம் கொண்டு அருளுதல் ) இளமையானவன் அழகானவன் எனைத் தேடி வருவார் எனில் கூடிடு கூடலே !



கொஞ்சம் செல்லமா அழகனார் குழகனார் என்பது அழகாக இருக்குல்ல :)

No comments:

Post a Comment

மறுமொழி இடுக!