Sunday 5 February 2017

141.வெளிய சங்கொன் றுடையானைப்

141.வெளிய சங்கொன் றுடையானைப்
பாடல் : 141
வெளிய சங்கொன் றுடையானைப்
பீதக வாடை யுடையானை
அளிநன் குடைய திருமாலை
ஆழி யானைக் கண்டீரே
களிவண் டெங்கும் கலந்தாற்போல்
கழம்பூங் குழல்கள் தடந்தோள்மேல்
மிளிர நின்று விளையாட
விருந்தா வனத்தே கண்டோமே

விளக்கம் : 
வெளிய சங்கு ஒன்று உடையானைப் - வெண்ணிற சங்கு ஒன்று உடையவனை
பீதக ஆடை உடையானை - மஞ்சள் ஆடை உடுத்தியவனை
அளி நன்கு உடைய திருமாலை - இரக்கம் /அன்பு நன்கு கொண்ட திருமாலை
ஆழி யானைக் கண்டீரே ? - சக்கரம் உடையவனைக் கண்டீரே ?
களிவண்டு எங்கும் கலந்தாற்போல் - மகிழ்வுற்று தேனுண்டு திரியும் வண்டுகள் எங்கும் கலந்தது போல
கமழ் பூங்குழல்கள் தடந்தோள் மேல் மிளிர - மணம் கமழும்  பூங்குழல்கள் பெரிய தோள் மேல் மிளிர
நின்று விளையாட விருந்தாவனத்தே கண்டோமே  - அவன்  நின்று விளையாட விருந்தாவனத்தே கண்டோமே
அளி -  இரக்கம் /அன்பு
பீதகம் - மஞ்சள் ஆடை
கேள்வி :
வெண் சங்கு உடையவனை, மஞ்சள் ஆடை உடுத்தியவனை ,இரக்கமும் அன்பும் நன்றாகவே கொண்ட திருமாலை,  சக்கரம் உடையவனைக் கண்டீர்களா ? (என்னடா..போன பாடல் வரை திட்டிட்டு இருந்தவள் இந்தப் பாடலில் இரக்கம் நன்கு கொண்ட திருமால் என்கிறாளே மனம் திருந்திவிட்டாளா என ஐயம் வேண்டாம்.. எந்த ஒரு சொல்லையும் சொல்கின்ற விதம் என ஒன்று உண்டில்லையா? அளி உடையவன் என்று சொல்லல அளி நன்கு உடையவன் என்கிறாள்..சற்றே எள்ளலாக..வஞ்சப்புகழ்ச்சி அணி என்றே உண்டு தமிழில்..ஒருவரைப் புகழ்வது போல இகழ்வது..இகழ்வது போலப் புகழ்வது..இவள் புகழ்வது போல இகழ்கிறாள்..திருமால் இரக்கமுடையவன் என்று சொன்னால் ஆமாமா நல்ல இரக்கமுடையவன் என்று சற்று ஏளனப் புன்னகையோடு சொன்னால் எப்படி இருக்குமோ அப்படிக் கற்பனை செய்துகொள்ளுங்கள் ..அடையாளம் சொல்கிறாள்.. வெண்சங்கு வச்சிருப்பான்..சக்கரம் வச்சிருப்பான்..மஞ்சள் நிறத்தில் ஆடை உடுத்தி இருப்பான்..அன்பு தான..நல்லா உடையவன் ம்க்கும்.. அவனைப் பார்த்தீங்களா..? )

Image result for vishnu images

பதில் : 
பூக்களில் தேனுண்டு மகிழ்ந்து இருக்கும் வண்டு எங்கும் கலந்தது போல ,மணம் கமழும் பூங்குழல்கள் (முடி ) அவனது பெரிய அகன்ற தோளின் மேல் மிளிர , அவன் நின்று விளையாடக் கண்டோமே
மணம் கமழ்கிறதாம் அவனது குழல்..அந்தக் குழலானது அவனது அகன்ற தோளில் விரும்பிப் படர்ந்திருக்கிறது வண்டுகள் பூக்களில் எ வ்வளவு மகிழ்ந்து தேன் உண்ணுமோ அதைப் போல .ஏனெனில் அந்தத் தோள் பரந்தாமனுடையது அல்லவா..அதற்கு மயங்காதோர் உண்டோ.. அதனால் அந்தக் குழலானது மகிழ்ந்து விளையாடுதாம் பரமனின் தோளில் ..

சற்றே பொறாமை தெரியுதுல்ல :) அந்தப் பேறு தனக்குக் கிடைக்காத ஆற்றாமையும்





No comments:

Post a Comment

மறுமொழி இடுக!