Friday 19 May 2017

பெரியாழ்வார் திருமொழி 03.07.04

பாடல் : 04
ஏழை பேதைஓர் பாலகன்
வந்துஎன் பெண்மக ளையெள்கி
தோழி மார்பலர் கொண்டு போய்ச்செய்த
சூழ்ச்சியை யார்க்குரைக்கேன்
ஆழியா னென்னு மாழ
மோழையில் பாய்ச்சி அகப்படுத்தி
மூழை யுப்பறி யாத
தென்னும் மூதுரையு மிலளே.

விளக்கம் :
ஏழை பேதை ஓர் பாலகன் வந்து - ஏழையானவள் பேதையானவள்
என்று  ஆராய்ந்து யோசித்து , பாலகன் வந்து
என்  பெண்மகளை எள்கி - என் பெண்மகளை ஏய்த்து
தோழிமார்  பலர் கொண்டு போய்ச் செய்த சூழ்ச்சியை யார்க்கு உரைக்கேன் - தோழிமார் பலர் இருந்தும்,  கொண்டு போய்ச் செய்த சூழ்ச்சியை நான் யாருக்கு உரைப்பது ?
ஆழியான் என்னும் ஆழ மோழையில் பாய்ச்சி அகப்படுத்தி - ஆழியான் என்னும் ஆழ மோழையில் (மதுவின் அடியில் ஓடும் ஆழமான அடி நீர் ) பாய்ச்சி அகப்படுத்தி
மூழை உப்பு அறியாதது என்னும் - உணவை அள்ளும் அகப்பை உப்பு அறியாதது
மூதுரையும் இலளே -என்னும் முதியோர் வாக்கும் அறியாதவளே
மூழை - அகப்பை
மோழை -மடுவின் /ஆற்றின்  அடியில் ஓடும் ஆழமான  அடிநீர்
ஓர் - ( இவ்விடம் வினைத்தொகை ) ஓர்தல் -ஆராய்தல் /யோசித்தல்
ஆழியான் -திருமால்

என் மகள் ஏழை, பேதை என்று நன்கு ஆய்ந்து அறிந்து கொண்டு , தோழிமார் பலர் சூழ அவள் இருந்தும் அவளை ஏய்த்து ஏமாற்றி இருக்கிறான்..இந்த சூழ்ச்சியை நான் யாரிடம் சென்று சொல்வேன் ?
திருமால் என்னும் ஆழமான அடிநீரில் அகப்பட்டுக் கொண்டாளே (ஆற்றின் /மடுவின் ஆழத்தில் இருக்கும் அடி நீர் )
கரண்டிக்கு கறிச்சுவை தான் தெரியுமா ,அகப்பைக்கு உப்புச் சுவை தான் தெரியுமா என்பது நாட்டார் தமிழ்ப் பழமொழி

அதாவது அள்ளுகின்ற கரண்டிக்கு உணவின் ருசி தெரியாதாம்..உண்மை தானே
ஆனா இங்க அவர் கரண்டி என்பது யாரை ?உலகளந்த உத்தமனை :)
மகளின் அருமை தெரியாதவனாம்..அவளின் அருமை பெருமை தெரியாதவனிடம் போய் மயங்கிக் கிடக்கின்றாளே :(


No comments:

Post a Comment

மறுமொழி இடுக!