Sunday 10 April 2016

35.மாட மாளிகை சூழ்

35.மாட மாளிகை சூழ்
பாடல் :35
மாட மாளிகை சூழ்மது ரைப்பதி
நாடி நந்தெரு வின்நடு வேவந்திட்டு
ஓடை மாமத யானை யுதைத்தவன்
கூடு மாகில்நீ கூடிடு கூடலே!
விளக்கம் :
 மாட மாளிகை சூழ் மதுரைப் பதி - மாட மாளிகைகள் சூழ்ந்த மதுரா நகர் வேந்தன்
நாடி நம் தெருவின் நடுவே வந்திட்டு - நமை நாடி நம் தெருவின் நடுவே வந்திட்டு
ஓடை மா மத யானை உதைத்தவன் - மதம் பிடித்து ஓடி வந்த பெரிய குவலய பீடம் என்ற யானையை உதைத்தவன்
கூடுமாகில்- என்னை வந்து கூடுவான் எனில்
நீ கூடிடு கூடலே !- நீ கூடிடு  கூடலே !

மாட மாளிகைகள் சூழ்ந்த மதுரை நகர் (வடக்கிலுள்ள மதுரா எனும் நகரம் ) வேந்தன் ,நம்மை நாடி நம் தெருவின் நடுவே வந்திட்டு ,மதம் பிடித்து ஓடி வந்த பெரிய,குவலயபீடம் என்ற யானையை எட்டி உதைத்து அடக்கியவன் என்னை வந்து கூடுவான் எனில் நீ கூடி விடு கூடலே !

என்னடா வடக்கே ஒரு மதுரை தெற்கே ஒரு மதுரைன்னு குழம்பாதீங்க..நம்ம மதுரை திரிந்த பெயர்..உண்மைப் பெயர் மருதை..மருத மரங்கள் சூழ்ந்தது மருத நிலம்..வயலும் வயல் சார்ந்த நிலமும் .வடக்கே இருக்கும் மதுரை மதுரா கிருஷ்ணன் பிறந்த ஊராகக் கருதப்படுவது..அந்த மதுரையின் அதிபதி  நம்மை நாடி தெருவின் நடுவே வருகின்றாராம்..எதற்கு?  மத யானையிடம் இருந்து நமைக் காப்பாற்ற..அந்த மதுரைப் பதி எனை வந்து சேர்வார் எனில் நீ கூடிடு கூடலே என்று குறி கேட்கிறாள் கோதை
 மத யானை துரத்துவது போல , அவனைச் சேரா பெருந்துயரம் அவளைத் துரத்துகிறது..அதிலிருந்து மீட்ட அவன் வருவானா சொல்லிடு கூடலே !

No comments:

Post a Comment

மறுமொழி இடுக!