36.அற்ற வன்மரு தம்முறி யநடை
பாடல் :36
அற்ற வன்மரு தம்முறி யநடை
கற்ற வன்கஞ் சனைவஞ் சனையினால்
செற்ற வன்திக ழும்மது ரைப்பதி
கொற்ற வன்வரில் கூடிடு கூடலே
விளக்கம் :
அற்றவன் மருதம் - அற்ற வன்மருதம் (மென் பட்டைகள் அற்ற வல்லமை மிக்க மருத
முறிய நடை கற்றவன் - மரங்கள் முறிய நடை கற்றவன்
கஞ்சனை வஞ்சனையினால் செற்றவன் - தன் மாமன் கம்சனை வஞ்சனையினால் திறமையுடன் வென்றவன்
திகழும் மதுரைப் பதி கொற்றவன் - திகழும் வட மதுரை அரசன்
வரில் கூடிடு கூடலே!- எனை வந்து சேருவார் எனில் கூடிடு கூடலே !
அற்றவன்...என்ன அற்றவனோ என யோசித்தேன் :) ஆடைகளைத் திருடியவன் என்பதால் மூன்றாம் திருமொழியில் 29ஆம் பாடலில் மசிமையீலி ன்னு சொல்றாளே அது போலவோ ?:) இல்லை இதற்குப் பின்னால் வேறு கதை இருக்கிறதாம் விசாரித்து அறிந்தேன் . அற்றவன் எனச் சொல்லாமல் அற்ற ,வன்மருதம் அதாவது மென்மையான மரப்பட்டைகள் இல்லாமல் வலிமைமிக்க கடினமான மரப்பட்டைகள் கொண்டது மருத மரம்.
குபேரனுடைய பிள்ளைகளான நளகுபாரன், மாணிக்ரீவன் என்ற இரட்டையர்கள் ,பெண்களோடு நிர்வாணமாக மென் வெட்கம் கூட இன்றி ஆற்றில் குளித்ததால் ,வன்மை பெற்ற மருத மரங்களாக மாறட்டும் என்ற சாபம் பெற்றனர். கண்ணன் குழந்தையாக உரலில் கட்டப்பட்டு இருக்கும்போது உருண்டு அம்மரத்தை இடிக்கவும் சாப விமோசனம் பெற்றனர் . வன் மருத மரத்தை முறித்து நடை பயின்றவன் இந்த கண்ணன். தன் மாமனாகிய கஞ்சனை (கோதை கம்சன் என்பதில்லை கஞ்சன் என்கிறாள் வடமொழி என்பதால் ) வஞ்சகத்தால் வென்றவன் .பல பெருமைகள் பெற்றுத் திகழும் மதுரா நகர்ப்பதி அரசன் என்னை வந்து சேர்வார் எனில் நீ கூடிடு கூடலே எனக் குறி கேட்கிறாள் கோதை.
No comments:
Post a Comment
மறுமொழி இடுக!