Thursday 21 April 2016

37.அன்றின் னாதன செய்சிசு பாலனும்

37.அன்றின் னாதன செய்சிசு பாலனும்
பாடல் :37
அன்றின் னாதன செய்சிசு பாலனும்
நின்ற நீள்மரு தும்மெரு தும்புள்ளும்
வென்றி வேல்விறற் கஞ்சனும் வீழமுன்
கொன்ற வன்வரில் கூடிடு கூடலே
விளக்கம் :
அன்று இன்னாதன செய்த சிசுபாலனும் - அன்று செய்யத் தகாத செயல்களைச் செய்த சிசுபாலனும்
நின்ற நீள் மருதும் எருதும் புள்ளும் -  மருத மர வடிவில்  வழிமறித்து நின்ற நளகுபாரன் மாணிக்ரீவனும் எருது வடிவில் நின்ற அரிஷ்டாசுரனும்  கொக்கு வடிவ பகாசுரனும்
வென்றி வேல் கஞ்சனும் வீழ -  கண்ணனின் , வெற்றி தரும் வேலால்  கஞ்சனும் வீழ
முன் கொன்றவன் - இவர்கள் யாவரையும் முற்காலத்தில் கொன்றவன்
வரில் கூடிடு கூடலே ! - வருவார் எனில் நீ கூடிடு கூடலே!

மாபெரும் அவையில்  கிருஷ்ணரை  சாதிப் பெயர் சொல்லித் திட்டியவன் சிசுபாலன்.. தன்னை இகழ்ந்த சிசுபாலனை நூறு பிழைகள் பொறுத்துப் பின் வதம் செய்தார்  கிருஷ்ணர் .

அடுத்து வரும் நீள் மருது முந்தைய 36 வது பாடலில் சொல்லப்பட்ட நளகுபாரன் &மாணிக்ரீவன் .. மருத மரங்களாக சாபம் பெற்றவர்கள் ,  கிருஷ்ணரால் முறிக்கப்பட்டு சாப விமோசனம் அடைந்தனர்.

 அடுத்து கோதை சொல்லும் எருது வடிவில் வந்த அரிஷ்டாசுரன் .ஒரு கிராமத்தை வெகுவாகத் துன்புருத்திய அரிஷ்டாசுரனை கிருஷ்ணர் வதம் செய்தார்.


அடுத்தது கொக்கு வடிவில் வந்த பகாசுரன்..(புள்ளின் வாய் கீண்டானை என்று திருப்பாவையில் சொல்லுவாள் )


வெற்றி வேலால் கஞ்சனையும் வீழ வைத்தவன் இந்த கண்ணன். இவர்கள் அனைவரையும் முற்காலத்திலே கொன்றவன்,  என்னைக் கூட வருவார் எனில் கூடிடு கூடலே எனக் குறி கேட்கிறாள் கோதை










No comments:

Post a Comment

மறுமொழி இடுக!