Saturday 24 June 2017

பெரியாழ்வார் திருமொழி 03.07.10

பாடல் : 10
ஞால முற்றும்உண்டு ஆலி
லைத்துயில் நாரா யணனுக்குஇவள்
மால தாகி மகிழ்ந்தன
ளென்று தாயுரை செய்ததனை
கோல மார்பொழில் சூழ்புது
வையர்கோன் விட்டுசித்தன்சொன்ன
மாலை பத்தும் வல்ல
வர்கட்கு இல்லை வருதுயரே.

விளக்கம் : 

ஞாலம் முற்றும் உண்டு - உலகம் முழுவதையும் உண்டு
ஆல் இலைத் துயில்  நாராயணனுக்கு இவள் - ஆல் இலையில் உறங்கிய நாராயணனுக்கு இவள்
மால் அது ஆகி மகிழ்ந்தனள் என்று தாயுரை செய்ததனை - மயக்கமுற்று காதலாகி மகிழ்ந்தனள் என்று தாய் உரை செய்ததனை
கோலமார் பொழில் சூழ் - அழகிய சோலை சூழ்ந்த
புதுவையர் கோன் விட்டு சித்தன் சொன்னமாலை பத்தும் - புதுவையர்   சான்றோன் விட்டு சித்தன் சொன்ன இத் தமிழ்ப் பாமாலை பத்தும் பாட
வல்லவர்கட்கு இல்லை வருதுயரே - வல்லவர்களுக்கு வரக்கூடிய துயர் ஒன்றும்  இல்லை
வரு துயர் - வந்த/வருகின்ற /வரக்கூடிய துயர்

உலகம் முழுவதையும் உண்டு ஆல மர இலையில் உறங்கிய நாராயணனுக்கு இவள் மயங்கிக் காதலாகி மகிழ்ந்தாள் என்பதைத் தாய் உரை செய்ததனை , அழகிய சோலை சூழ்ந்த ,வில்லிபுத்தூர் சான்றோன் விட்டு சித்தன் சொன்ன தமிழ் மாலை பத்தும் பாட வல்லவர்களுக்கு ,வருகின்ற துயர் என ஒன்றும் இல்லை.
மூன்றாம் திருமொழியில் உள்ள  ஆண்டாளுக்காக பெரியாழ்வார் எழுதிய  ஏழாம் பத்து இனிதே நிறைவுற்றது !!!

No comments:

Post a Comment

மறுமொழி இடுக!