Saturday 15 July 2017

பெரியாழ்வார் திருமொழி 03.08.04

பாடல் : 04

ஒருமகள் தன்னை யுடையேன்
உலகம் நிறைந்த புகழால்
திருமகள் போல வளர்த்தேன்
செங்கண்மால் தான்கொண்டு போனான்
பெருமக ளாய்க்குடி வாழ்ந்து
பெரும்பிள்ளை பெற்ற அசோதை
மருமக ளைக்கண்டு கந்து
மணாட்டுப்பு றம்செய்யுங் கொலோ.

விளக்கம் :

ஒருமகள் தன்னை உடையேன் - ஒருமகள் எனக்கு இருக்கிறாள்
உலகம் நிறைந்த புகழால் திருமகள் போல வளர்த்தேன் - உலகம் நிறைந்த புகழ்பெற்ற திருமகளைப் போல அவளை வளர்த்தேன்
செங்கண்மால்  தான் கொண்டு போனான் - அவளை செம்மையான கண்களை உடைய மாலவன் தன்னோடு கொண்டு போனான்
பெருமகளாய் ஆய்க்குடி வாழ்ந்து பெரும்பிள்ளை பெற்ற அசோதை - ஆயர் குடிக்கே பெருமகளாக வாழ்ந்து பெருமை மிக்க பிள்ளையைப் பெற்ற அசோதை
மருமகளைக் கண்டு உகந்து மணாட்டுப் புறம் செய்யும் கொலோ - மருமகளான என் மகளைக் கண்டு விரும்பி மகிழ்ந்து ,மருமகளாக ஏற்று குடித்தனம் வைப்பாளோ ?

அழகான பாசுரம் இது. முந்தைய பத்துப் பாடல்களில் காறை  பூணும் பாடலும், இந்த ஒரு மகளை உடையேன் பாடலும் தான் மிக ஈர்த்து, இந்த இருபது பாடல்களை எழுதத் தூண்டியவை. மகளுக்காக தாய் உரை செய்தது போல அவர் எழுதி இருந்தாலும் அந்தத் தகப்பன்சாமியின் அன்பு நிறைவாகத் தெரிந்தது எனக்கு .
ஒரு மகளை உடையவன் நான். அவளே என் உடைமை. (தட் ஒன்னே ஒன்னு கண்ணே கண்ணு மொமென்ட் )  திருமகள் என்றால் அறியாதோர் இலர். அப்பேர்ப்பட்ட திருமகளைப் போல அவளை நான் வளர்த்தேன். (என் வீட்டு மகாலட்சுமி ஐயா கோதை )
செம்மையான கண்களை உடைய திருமால் என் வீட்டுத் திருமகளை, தான் கொண்டு போனான்.
அவனுடைய அம்மா ஆயர் குடிக்கே பெருமகள் . பெரும் பிள்ளை பெற்றவள் பின்னே அந்த கண்ணனுக்கே அம்மா என்றால் சும்மாவா..ரொம்பப் பெரிய்ய்ய்ய ஆளு. (வளர்த்தவள் என்று சொல்லி யசோதையை சிறுமைப்படுத்திட முடியாது .ஏன்னா பெத்த பாசத்த விட வளர்த்த பாசம் அதிகம். அதனால் அவளைப் பிரிச்சுப் பார்க்க முடியாது )
என் பொண்ணுக்கு மாமியார். மணாட்டுப் பெண் -மருமகளை நல்லபடியா பார்த்துக்குவாளா ..அவளை விரும்பி ஏற்று கண்ணன் கூட குடித்தனம் நடத்த விடுவாளா?(சம்பந்தகாரம்மா மேல பயம் +மரியாதை .
அதனால் வலிய இந்தப் பாசுரத்தில் யசோதையை கொலுவீற்றுகிறார் பெரியாழ்வார்.

No comments:

Post a Comment

மறுமொழி இடுக!