Wednesday 6 July 2016

58 மத்தளம் கொட்டவ ரிசங்கம் நின்றூத

58.மத்தளம் கொட்டவ ரிசங்கம் நின்றூத
பாடல் : 58
மத்தளம் கொட்டவ ரிசங்கம் நின்றூத
முத்துடைத் தாமநி ரைதாழ்ந்த பந்தற்கீழ்
மைத்துனன் நம்பிம துசூதன் வந்துஎன்னைக்
கைத்தலம் பற்றக்க னாக்கண்டேன் தோழீநான்

விளக்கம் : 
மத்தளம் கொட்ட வரிசங்கம் நின்றூத - மத்தளம் கொட்ட வரிகள் நிறைந்த சங்கு நெடுநேரம் ஊத
முத்துடைத் தாம நிரை தாழ்ந்த பந்தல் கீழ் - முத்துக்களை உடைய மாலைகள் வரிசையாய் தொங்க அந்தப் பந்தலின் கீழ்
மைத்துனன் நம்பி மதுசூதனன் வந்து என்னைக் - என் மச்சான்  நம்பி மதுசூதனன் என்னை வந்து
கைத்தலம் பற்றக் கனாக் கண்டேன் தோழீ நான் - என் கைகளைப் பற்ற கனவு கண்டேன் தோழீ நான்

மத்தளம் கொட்ட...கெட்டி மேளம் கெட்டி மேளம் ..வரிசங்கம் நின்றூத..(அந்தக் காலத்தில் சங்கொலி என்பது அனைத்து காரியங்களுக்கும் பயன்பட்டிருக்கின்றது..இன்றுதான் அது கருமாதிக்கு என்றாகி ஒரு குலத்தை தாழ்த்தப் பயன்படுவது வேதனை  ) முத்துக்களை உடைய மாலைகள் வரிசையாய்த் தாழத்தொங்க,  அந்தப் பந்தலின் கீழ் ,அவளின் ஆசை மச்சான் நம்பி மதுசூதனன் கைத்தலம் பற்றக் கனவு கண்டாளாம் கோதை..கல்யாணம் ஆகிடுச்சு :)
Image result for நால் திசை தீர்த்தம் கொணர்ந்து
ஆசைக் கணவன் கைகளைப் பற்றுகையில் வரும் இன்பமே அலாதி..அதை அழகுற இப்பாடலில் சொல்லி இருக்கிறாள் கோதை :)  கற்பனையே எவ்வளவு மங்கலகரமா இருக்கு :) நமது பாரபம்பரியத் தவில், மேளம் நாதஸ்வரம் விடுத்து , செண்ட மேளம் வைத்து பகட்டுக் காட்டுவது இப்ப பரவிகிட்டு வருவது வருத்தம்.. பாரம்பரியம் மிக்க நம் இசை வாத்தியங்களை இசைத்து அங்கே வாரணம் ஆயிரம் பாடல் சொல்லி திருமணம் செய்யுங்களேன்..அதனால் பெறும் மனநிறைவு கோடி பெறும் :)
இந்த மச்சான் என்ற சொல் இப்ப கணவரின் அண்ணன் என்பவரைக் குறிக்க மட்டுமே சொல்லப்படுகிறது.. ஆனா முன்பு கணவரைத் தான் மச்சான் என்று சொல்வார்கள்..அதனால்தான் கோதை மைத்துனன் நம்பி மதுசூதனன் என்கிறாள்..


தகப்பன் பெரியாழ்வார் பெண்ணைத் தாரை வார்த்துக் கொடுக்க அதைப் பெற்றுக் கொண்டு கைப்பிடிக்கிறார் நம்பி எம்பெருமான் மதுசூதனன்.. :) திருமணம் ஆகும்வரை தானப்பா என் பொறுப்பு,  இனி நீதான் என் மகளைப் பார்த்துக் கொள்ள வேணும் என்று மருமகளிடம் இந்தப் பிடிவாத கோதையை ஒப்படைத்து விடுகிறார் பெரியாழ்வார் :)) பின்ன..கட்டுனா கண்ணன் இல்லாட்டி இப்படியே இருந்துடறேன்னு பிடிவாதம் பிடித்த பெண்ணாயிற்றே :)
எனக்கு இந்தப் பாடலில் தீராச் சந்தேகம் ஒன்று நெடுநாளாக இருந்தது.. ஏன் மங்கல நாண் சூட்டுதலைக் கோதை சொல்லவில்லை என.. அடுத்து வரும் குங்குமம் அப்பி பாடலில் மஞ்சனம் ஆட்ட என்பதைத் தான் மங்கல நாண் எனத் தவறாகப் புரிந்து வைத்திருந்தேன்..ஆனால் அதன் பொருள் பின்னாளில் தான் புரிந்தது.. இவ்வளவு சடங்குகளைச் சொல்பவள் ஏன் மங்கல நாண் பூட்டலைப் பற்றிப் பேசவில்லை என்று யோசித்தேன்..ஒருவேளை அந்தக் காலத்தில் மங்கல நாண்  பூட்டும்  வழக்கம் இல்லையா என்ன ?
பனை ஓலைத் தாலி இருந்ததாக சங்கத் தமிழ் சொல்கின்றதே பின்னர் ஏன்?
இங்கு ஒன்று நாம் கவனத்தில் கொள்ள வேண்டியது , கோதை சொல்வது முழுக்க இந்துத் திருமணச் சடங்கு.. அதாவது அக்காலத்தில் பிராமணர்களின் சடங்கு.. தமிழர் வழக்கத்தில் தான் தாலி இருந்ததே தவிர , பிராமண வழக்கத்தில் அப்போதைக்கு இல்லை. ஆகவேதான் கோதை இங்கே தாலி பற்றி எதுவும் சொல்லவில்லை. (கோதை பெரியாழ்வார் வீட்டில் வளர்ந்த பெண் என்பதால் இந்துத் திருமணச் சடங்குகள் பற்றித் தெளிந்தவள் )
பின்னாளில் தான் ,அடையாளப் பனை ஓலைத் தாலி பொன் தாலி ஆனது ..

ஆகவே , அவள்  கைத்தலம் பற்றியதாகச் சொல்லியதையே மணம் முடிந்ததாக எடுத்துக் கொள்வோம் :)
மனம் கொண்ட மணாளனைக் கைப்பிடித்தாள் கோதை.. இனி அவள் ஆண்டவனையே ஆண்ட  , ஆளுகின்ற ஆண்டாள்..:) 

No comments:

Post a Comment

மறுமொழி இடுக!