Thursday 30 June 2016

57 கதிரொளி தீபம்க லசமு டனேந்தி

57.கதிரொளி தீபம்க லசமு டனேந்தி
பாடல் :57
கதிரொளி தீபம்க லசமு டனேந்தி
சதிரிள மங்கையர் தாம்வந்தெ திர்கொள்ள
மதுரையார் மன்ன னடிநிலை தொட்டுஎங்கும்
அதிரப் புகுதக் கனாக்கண்டேன் தோழீநான்

விளக்கம் :
கதிரொளி தீபம் கலசமுடன் ஏந்தி - கதிரவனின் ஒளிபோல ஒளி வீசும் தீபங்களையும்பொ ற் கலசங்களையும் ஏந்தி
சதிர் இள மங்கையர் தாம் வந்து எதிர்கொள்ள - அழகிய இளமையான பெண்கள் தாமே முன் வந்து எதிர்கொள்ள
மதுரையார் மன்னன் அடிநிலை தொட்டு எங்கும் - வட மதுரை மன்னன் நடப்பதில் அவன் பாதத்தின் அடியில் இருந்த நிலம் எங்கும்
அதிரப் புகுதக் கனாக் கண்டேன் தோழீ நான் - அதிருகின்றன..நிலம்  அதிர அவர் நடந்து வந்து மணப் பந்தல் புகுவது போன்று கனவு கண்டேன் தோழீ நான்.

அழகிய இளம் பெண்கள்,  கதிரவனின் ஒளி போன்ற ஒளி வீசும்  திறன்மிக்க தீபங்களையும் பொன் கலசங்களையும் ஏந்தி மாப்பிள்ளையான வட மதுரை மன்னனான கண்ணன் , நிலம் எங்கும் அதிர,  மணப்பந்தலின் உள்ளே புகுவது போன்று கனவு கண்டேன் தோழீ நான்


மாப்பிள்ளை வந்தா அவர் எதிரே போய் அவரை வரவேற்கறது தானே வழக்கம்..ஆலத்தி எடுக்கணும். அதற்கு இளம் பெண்கள் வேணும்..அதான் பொன் குடங்கள் ஏந்தி தீபம் ஏந்தி அவரை வரவேற்கிறார்கள்.. வட மதுரை மன்னன் கண்ணன் காளை ஆகிற்றே..அதனால் அவர் நடையானது,  அவர் வருவதைப் பறைசாற்றும் வகையில் அதிர அதிர நடக்கிறாராம்..அதிர நடந்து வந்து மணப் பந்தல் புகுவது போலக் கனவு கண்டாளாம் கோதை..

இருந்தாலும் அவள் நாயகனுக்கு அவள் கொடுக்கிற பில்டப் BGM லாம் பக்காவா இருக்கு ..பார்த்தீங்களா... :)) 

1 comment:

  1. நாச்சியாரின் build up ஐ விட உங்க build up தான் சூப்பர்.

    ReplyDelete

மறுமொழி இடுக!