Saturday 13 August 2016

67.சந்திர மண்டலம்போல் தாமோத ரன்கையில்

67.சந்திர மண்டலம்போல் தாமோத ரன்கையில்
பாடல் : 67
சந்திர மண்டலம்போல் தாமோத ரன்கையில்
அந்தர மொன்றின்றி யேறிய வஞ்செவியில்
மந்திரம் கொள்வாயே போலும்வ லம்புரியே
இந்திரனு முன்னோடு செல்வத்துக் கேலானே

விளக்கம் : 
சந்திர மண்டலம் போல் தாமோதரன் கையில் - சந்திர மண்டலம் போல் தாமோதரன் கையில்
அந்தரம் ஒன்று இன்றி ஏறி அவன் செவியில்  - எப்போதும்  அங்கே இருந்து கொண்டு அவனோட காதில்
மந்திரம் கொள்வாயே போலும் வலம் புரியே -  ஏதோ இரகசியம் பேசுவாய் போல  சங்கே
இந்திரனும் உன்னோடு செல்வத்துக்கு ஏலானே  - அந்த இந்திரன் கூட உன்னோட இந்த செல்வத்துக்கு ஈடாக மாட்டான்

வலம்புரிச் சங்கே ! அந்த சந்திர மண்டலம் போல் தாமோதரன் கையில் எப்போதும் அங்கேயே இருந்து கொண்டு ,  அவனது செவியில் ஏதோ அந்தரங்கம்  பேசுவாய் போல .இப்பேர்ப்பட்ட   பாக்கியம் உனக்கு.   செல்வச் சீமானான இந்திரனும் கூட  உன்னுடைய இந்தச் செல்வத்துக்கு  ஈடாக மாட்டான்


கடவுளின் காதருகே வாய்க்கப்பெற்ற பாக்கியம் வேறு எவருக்கும் கிடைக்காது..எப்பேர்ப்பட்ட செல்வந்தனும் வலம்புரிச் சங்கின் இச்செல்வத்துக்கு ஈடாக மாட்டான் என்கிறாள் ஆண்டாள் :) 

No comments:

Post a Comment

மறுமொழி இடுக!