Saturday 20 August 2016

73.பாஞ்சசன் னியத்தைப் பற்பநா பனோடும்

73.பாஞ்சசன் னியத்தைப் பற்பநா பனோடும்
பாடல் :73
பாஞ்சசன் னியத்தைப் பற்பநா பனோடும்
வாய்ந்தபெ ருஞ்சுற்ற மாக்கிய வண்புதுவை
ஏய்ந்தபுகழ்ப் பட்டர்பிரான் கோதைதமி ழீரைந்தும்
ஆய்ந்தேத்த வல்லா ரவரும ணுக்கரே

விளக்கம் :
பாஞ்ச சன்னியத்தைபற்ப  நாபனோடும் - பாஞ்ச சன்னியத்தை பத்ம நாபனோடும்
வாய்ந்த பெரும் சுற்றம் ஆக்கிய வண் புதுவை - பெரும் உறவாக்கிய அழகிய வில்லிபுத்தூரில் பிறந்தவளும்
ஏய்ந்த புகழ்ப் பட்டர்பிரான் கோதை தமிழ் ஈரைந்தும் - நிறைந்த புகழ்பெற்ற பட்டர்பிரான் பெரியாழ்வார் மகள் கோதை சொன்ன இந்தப் பத்து தமிழ்ப் பாமாலையை
ஆய்ந்து ஏத்த வல்லார் அவரும் அணுக்கரே - பொருள் புரிந்து பாட வல்லவர்கள் கண்ணனுக்கு நெருக்கமாவார்கள்


எங்கயோ பிறந்த சங்காகினும் ,கண்ணன் கையில் இருக்கின்ற காரணத்தினாலேயே அதன் சிறப்பைச் சொல்லி அதை அந்த பத்ம நாபனுடன் பெரும் உறவாக்கிய ,அழகிய வில்லிபுத்தூரில் பிறந்தவளும் ,



நிறைந்த புகழ்பெற்ற பெரியாழ்வார் பட்டர்பிரானின் மகளுமான கோதை சொன்ன இந்த பத்து தமிழ்ப் பாடல்களையும் ஆய்ந்து பாட வல்லவர்கள் கண்ணனுக்கு நெருக்கமாவார்கள் ..
உயிரற்ற சங்கு..ஆனால் கண்ணனின் கைகளில் இருப்பதாலேயே அதன் மீது விருப்புற்று, அதன் மீது பொறாமை கொண்டு, சண்டை இட்டு எவ்வளவு காதல் இந்தப் பெண்ணுக்கு..:) 

நாச்சியார் திருமொழி ஏழாம் பத்து இனிதே நிறைவுற்றது :) 

No comments:

Post a Comment

மறுமொழி இடுக!