Saturday 13 August 2016

68.உன்னோடு டனேயொ ருகடலில் வாழ்வாரை

68.உன்னோடு டனேயொ ருகடலில் வாழ்வாரை
பாடல் :68
உன்னோடு டனேயொ ருகடலில் வாழ்வாரை
இன்னாரி னையாரென் றெண்ணுவா ரில்லைகாண்
மன்னாகி நின்றம துசூதன் வாயமுதம் பன்னாளு
முண்கின்றாய் பாஞ்சசன் னியமே!

விளக்கம் :
உன்னோடு உடனே ஒரு கடலில் வாழ்வாரை - உன்னோடு கூடவே பிறந்த ஒரே கடலில் வாழ்பவர்களை
இன்னார் இனையார் என்று எண்ணுவாரில்லை காண் - இன்னார் என அடையாளம் கண்டு மதிக்க எவரும் நினைப்பதில்லை என்பதைப் பார்
மன்னாகி நின்ற மதுசூதன் வாய் அமுதம் பன்னாளும் - எந்நாளும் நிலைத்து நின்ற மதுசூதனன் வாய் எச்சில் எப்பொழுதும்
உண்கின்றாய் பாஞ்ச சன்னியமே ! - நீ ஒருவன் மட்டுமே உண்கின்றாய் பாஞ்சசன்னியமே !

கடலில் சங்கு மட்டுமா இருக்கு..இன்னும் எத்தனை எத்தனையோ உயிர்கள் வாழ்கின்றன.. ஆனால் அன்பின் பாஞ்சசன்னியமே !உனக்கு மட்டும் ஏன் இவ்வளவு முக்கியத்துவம் என்பதை அறிவாயா? உன்னோடு பிறந்த உயிர்கள் எவற்றையும் எவரும் இது இன்னார் என்று கண்டு உணர,  சிந்திப்பதில்லை என்பதைக் கண்டாயா ?


ஏனெனில் நீதான் ,என்றும் நிலைத்தப் புகழ்பெற்ற மதுசூதனனின் திருவாய் அமுதம் உண்கின்றாய் அந்தப் பேறு பெற்றவன் . அதனால்தான் உனக்கு மட்டும் இந்தக் கவுரவம் !
ஆண்டாளில் possessiveness ( தன்னுடைமை ) இப்பாடல்களில் அழகாக வெளிப்படுகின்றது.. தான் எதற்காக ஏங்கிக் கிடக்கின்றோமோ அதை வேறொருவர் உரிமையுடன் அனுபவிப்பதை ,  சற்றே பொறாமையுடன் கூறுவது :)

No comments:

Post a Comment

மறுமொழி இடுக!