Monday 15 August 2016

70.செங்கமல நாண்மலர்மேல் தேனுகருமன்னம்போல்

70.செங்கமல நாண்மலர்மேல் தேனுகருமன்னம்போல்
பாடல் : 70

செங்கமல நாண்மலர்மேல் தேனுகருமன்னம்போல்
செங்கட்க ருமேனி வாசுதே வனுடய
அங்கைத்த லமேறி அன்னவ சஞ்செய்யும்
சங்கரையா உஞ்செல்வம் சாலவ ழகியதே

விளக்கம் :
செங்கமல நாண்மலர் மேல் தேன்நுகரும்  அன்னம் போல் -  அன்று மலர்ந்த சிவந்த தாமரை மலர் மேல் தேன் நுகரும் அன்னம் போல
செங்கட் கருமேனி வாசுதேவனுடைய - சிவந்த கண்களும் கருத்த மேனியும் கொண்ட வாசுதேவனுடைய
அங்கைத்தலம் ஏறி அன்னவசம்  செய்யும் - அழகிய கைத்தலம் ஏறி அங்கே கண் வளரும்
சங்கு அரையா ! உன் செல்வம் சாலவும் அழகியதே ! - சங்குகளின் தலைவா ! உன் செல்வம் மிகவும் அழகியதே !

புதுசா அன்னிக்குப் பூத்த சிவந்த தாமரை மலர் மேல் தேன் நுகரும் அன்னப்பறவையைப் போல சிவந்த கண்களும் கருத்த மேனியும் கொண்ட


வாசுதேவனுடைய ,அழகிய கைத்தலம் ஏறி ,  சிவந்த இதழ்களில் உள்ள வாய் அமுதத்தைப் பருகி ,அமுதம் உண்ட களைப்பில் அங்கே கண் வளரும் (உறங்குவதை இலக்கியங்கள் பெரும்பாலும் கண் வளர்தல் என்றே கூறுகின்றன கண் மூடுதல் என்பதன் பொருள் எதிர்மறையானது என்பதால் ) சங்குகளின் அரசனே !உனது இந்தச் செல்வம் மிகவும் அழகியதே !


கண்ணனின் சிவந்த இதழ்களை புதிதாய்ப் பூத்த தாமரைப்பூவிற்கு ஒப்பாகவும்,  பளிச்சென்று வெண்மையாக இருக்கும் சங்கை அன்னத்திற்கு  ஒப்பாகவும் கூறுகிறாள் ஆண்டாள் :) கண்ணனின் வாயமுதம் பெரும் போதையாம் ஆதலால்தான் அதை உண்ட மயக்கத்தில் உறக்கம் வருகின்றதாம் :) 
திஸ்ஆண்டாள் இஸ் ட்டூ ரொமாண்டிக் யூ நோ ?:) 

No comments:

Post a Comment

மறுமொழி இடுக!