Friday 5 August 2016

65.கடலில்பி றந்துக ருதாது பஞ்சசனன்

65.கடலில்பி றந்துகருதாது பஞ்சசனன்
பாடல் :65
கடலில்பி றந்துக ருதாது பஞ்சசனன்
உடலில்வ ளர்ந்துபோ யூழியான் கைத்தலத்
திடரில்கு டியேறித் தீயவ சுரர் நடலைப்ப
டமுழங்கும் தோற்றத்தாய் நற்சங்கே

விளக்கம் : 
கடலில் பிறந்து கருதாது- சங்கே!நீ கடலில் பிறந்தாய் அந்தப் பிறந்த இடத்தையும் மறந்தாய்
 பஞ்சசனன்  உடலில் வளர்ந்து போய் ஊழியான் கைத்தலத்து - பஞ்சசனன் உடலிலே வளர்ந்தாய் இறுதியில் ஊழியான் கைத்தலத்தில்
இடரில் குடியேறித் தீய அசுரர் நடலைப்பட குடியேறி தீமை செய்யும் அசுரர் நடுநடுங்க துன்பப்படும்படி
முழங்கும் தோற்றத்தாய் நற்சங்கே - முழங்கும் தோற்றமுடையவன் ஆனாய் நல்ல சங்கே !

அன்பின் நற்சங்கே !நீ பிறந்ததோ கடலில்..வளர்ந்ததோ பஞ்சசனன் எனும் அரக்கனின் உடம்பில்..ஆனால் இப்படி பிறந்த,வளர்ந்த இடத்தை மறந்துவிட்டு ஆழிமழைக் கண்ணன் அந்த ஊழியானின் கைத்தலத்தில் குடியேறிக் கொண்டு தீமை செய்யும் அசுரர் நடுநடுங்கத்  துன்பப்படும் படி .. இறைவன் வருகிறான் சென்று விடுங்கள் என்று எச்சரிக்கை செய்யும்படி முழங்கும் மேன்மை பெற்ற தோற்றத்தான் ஆனாய்..
எப்பேர்ப்பட்ட மேன்மை இந்தச் சங்குக்கு :)


ஊழி - ஓர் அருமையான தமிழ்ச் சொல்.
சகாப்தம் (ERA )  என்பதற்குப் பதிலாக ஊழிச் சான்றோன் என்று சொல்லவும்.
திருப்பாவையிலும் ஊழி முதல்வன் போல் மெய் கருத்து "என்பாள் ஆண்டாள். 

No comments:

Post a Comment

மறுமொழி இடுக!