Tuesday 16 August 2016

71.உண்பது சொல்லிலு லகளந்தான் வாயமுதம்

71.உண்பது சொல்லிலு லகளந்தான் வாயமுதம்
பாடல் :71
உண்பது சொல்லிலு லகளந்தான் வாயமுதம்
கண்படை கொள்ளில்க டல்வண்ணன் கைத்தலத்தே
பெண்படை யாருன்மேல் பெரும்பூசல் சாற்றுகின்றார்
பண்பல செய்கின்றாய் பாஞ்சசன் னியமே

விளக்கம் :
உண்பது சொல்லில் உலகளந்தான் வாய் அமுதம் - நீ உண்பது பற்றிச் சொல்ல வேண்டுமானால் அது உலகளந்தான் வாய் அமுதம்
கண்படை கொள்ளில் கடல் வண்ணன் கைத்தலத்தே - நீ உறங்குவது பற்றிச் சொல்வதென்றால் அது கடல் வண்ணம் கொண்டவன் கைத்தலத்திலே
பெண்படையார் உன்மேல் பெரும்பூசல் சாற்றுகின்றார் - இவ்வாறு நீ செய்வதனால் பெண்கள் கூட்டம் உன் மீது பெரும் குற்றம் சாற்றுகின்றனர் சண்டை போடுகின்றனர்
பண்பு அல செய்கின்றாய் பாஞ்சசன்னியமே ! - இப்பெண்கள் அனுபவிக்க வேண்டியவற்றை நீ ஒருவனே அனுபவிப்பது பண்பு அல்லவே நியாயமற்றதைச் செய்கின்றாய் பாஞ்சசன்னியமே !

பாஞ்சசன்னியமே ! நீ உண்பது பற்றிச் சொல்வதெனில் அது உலகளந்தான் வாயமுதம் ..நீ படுத்துறங்கிக் கொள்ளும் இடம் எதுவெனில் கடல்வண்ணம் கொண்டவன் கைத்தலத்திலே /இதனால் மாதவன் மீது மையல் கொண்ட பெண்கள் கூட்டம் தங்களுக்குக்  கிடைக்கவிடாமல் நீ ஒருவனே இவை யாவையும் அனுபவிப்பதால் உன்மேல் பெரும் குற்றம் சாற்றுகிறார்கள்..சண்டை இடுகிறார்கள் ..இது பண்பற்ற செயல்..இது நியாயமா அடுக்குமா ?


மனசு முழுக்க மாதவன் வாயமுதம் பருகும் சங்கின் மீது இவள் பொறாமை கொண்டுவிட்டு ,தான் ஒரு ஆள் இப்படி நினைப்பதாகச் சொன்னால் ஏதோ சிறுபெண் என்று சங்கு கருதாமல் விட்டுவிடக் கூடும்..அதனால் கூட்டமாக ஆளைச் சேர்த்துக் கொண்டு கவன ஈர்ப்புப் போராட்டம் நடத்துகிறாள் ஆண்டாள் :)
தனக்கு விட்டுக் கொடுக்காமல் , இந்த பாஞ்சசன்னியம் ஒருவனாக எல்லாவற்றையும் அனுபவிப்பது குறித்து உள்ளூர ஏக்கமும் பொறாமையும் கொண்டு குற்றம் சாற்றுகிறாள்.. :)

சொன்னாலும் கேட்பதில்லை கன்னி மனது :) 


No comments:

Post a Comment

மறுமொழி இடுக!