Thursday 10 November 2016

94.கார்க்கோடல் பூக்காள் !

94.கார்க்கோடல் பூக்காள் !

நாச்சியார் திருமொழி பத்தாம் பத்து இனிதே ஆரம்பம் :) இந்தப் பூவை பூக்களிடம் நியாயம் கேட்கிறாள்

பாடல் : 94
கார்க்கோடல் பூக்காள் ! -
கார்க்கடல் வண்ணனென் மேல்உம்மைப்
போர்க்கோலம் செய்து போர
விடுத்தவ னெங்குற்றான்
ஆர்க்கோ இனிநாம் பூச லிடுவது
 அணிதுழாய்த் தார்க்கோடும் நெஞ்சந்
தன்னைப் படைக்கவல் லேனந்தோ.

விளக்கம் :
கார்க்கோடல் பூக்காள் ! -கருங்காந்தள்  பூக்களே
கார்க்கடல் வண்ணன் என் மேல் உம்மைப் - கருமையான கடலின் வண்ணன்  என்மேல் உங்களைப்
போர்க்கோலம் செய்து போர விடுத்தவன் எங்குற்றான் ? - போர்க்கோலம் செய்து ஏவியவன் எங்கு சென்றான் ?
ஆர்க்கோ இனி நாம் பூசலிடுவது - முறையோ இனி நாம் வழக்காடுவது ?
அணி துழாய்த் தார்க்கு ஓடும்  - அழகிய துளசி  மாலைக்கு ஓடும்
நெஞ்சத் தன்னைப் படைக்க வல்லேன் அந்தோ ? -  நெஞ்சத்தைத் தடுக்க முடியாதவள் ஆகிப் போனேனே அந்தோ..

கருங்காந்தள் பூக்களே ! கருமை நிற கடல் வண்ணன் என் மேல் உங்களைப் போர்க்கோலம் செய்து ஏவியவன் எங்க போனான் ?
Image result

இனி முறையோ நாம் சண்டையிட்டுக் கொள்வது ? அழகிய துளசி மாலைக்காக ஏங்கிச் செல்லும் மனசைக் கட்டுப்படுத்த முடியாத ,அந்த மனசை மாற்றிப் படைக்க வல்லவள் அற்றவளாகப் போனேனே அந்தோ.. ?
Image result

அந்தோ என்பது பரிதாபத்துக்குச் சொல்லப்படும் சொல்..இங்கே சுய கழிவிரக்கம் கொண்டவளாய் ஆனாள் ஆண்டாள்..துளசி மாலை இருக்கும் சுந்தரனின் தோள்களுக்கு ஏங்கியவள் ஆனாள் அதைக் கட்டுப்படுத்த முடியாம,அதை அடக்க வழி தெரியாம ,(அடக்க விருப்பமும் இருக்காது என்பது வேறு விஷயம் :) ) மனசை மாற்றிப் படைக்க வல்லமை இல்லாமப் போனதுக்கு தன்னைத்தானே நொந்து கொள்கின்றாள்..

கருங்காந்தள் பூ..அட..பூவிலும் கருப்பு இருந்திருக்கும் போல..நானும் தேடிப் பார்த்தேன்..செங்காந்தள் இருக்கு..ஏன் வெண்மை நிறம் கூட இருக்கு..ஆண்டாள் பொய் சொல்ல மாட்டாள்..கருங்காந்தளும் இருந்திருக்கக்கூடும்

எதாவது ஒரு கோபத்தில் சலிப்பில் எங்க போய்த் தொலைஞ்ச என்போம்..அது மாதிரித்தான் அந்தப் பூக்களிடம் சொல்கிறாள்..உன்னை என் மேல ஏவி விட்டுப்புட்டு அவன் எங்க போய்த் தொலைஞ்சான்..? எதற்கு இந்த ஒளிஞ்சு விளையாட்டு? இனி நாம வாதிட்டு வழக்காடுவது  முறை ஆகாது (அதாவது என்னாங்குறா..இனிமே டீலிங் எல்லாம் நேரா அவன்கிட்டயே வச்சுக்கறது தான் சரி ங்கறா :))

இவ்வளவு துன்பத்தை எனக்குத் தருகிறானே என மனம் அவனை நினைக்காமலாவது இருக்குதா..அவன்  (துழாய் -துளசி ) துளசி மாலையைப் பார்த்தாப் போதும்..உடனே அத்தனையும் மறந்துட்டு ஈஈஈ ன்னு அங்க போய் உட்கார்ந்துக்குது இந்த மனசு..(கொஞ்சம் கூட வெட்கமில்லை அதுக்கு )அப்படி அலைபாயுற மனசக் கட்டுப்படுத்தற ,மாற்றும் வல்லமையாச்சும் இருக்குதா அதுவும் இல்ல..நான் என்ன செய்வேன் (தலையிலஅடிச்சுக்கறசுமைலி )

நெஞ்சே என் நெஞ்சே செல்லாயோ அவனோடு
சென்றால் வர மாட்டாய் அது தானே பெரும்பாடு..  தன்ன னானன ..தன்ன னானன ..

என்னமோ போடா மாதவா ... !

No comments:

Post a Comment

மறுமொழி இடுக!