Thursday 3 November 2016

92.கோங்கல ரும்பொழில்மா லிருஞ்சோலயில்

92.கோங்கல ரும்பொழில்மா லிருஞ்சோலயில்
பாடல் :92
கோங்கல ரும்பொழில்மா லிருஞ்சோலயில் கொன்றைகள்மேல்
தூங்குபொன் மாலைகளோ டுடனாய்நின்று தூங்குகின்றேன்
பூங்கொள் திருமுகத்து மடுத்தூதிய சங்கொலியும் சார்ங்கவில்
நாணொலியும் தலைப்பெய்வதெஞ் ஞான்றுகொலோ

விளக்கம் :
கோங்கு அலரும் பொழில் மால் இருஞ்சோலையில் - கோங்கு மரங்களின் பூக்கள் மலரும்  திருமால் இருக்கும் சோலையில்
கொன்றைகள் மேல் தூங்கு பொன் மாலைகளோடு உடனாய் நின்று தூங்குகின்றேன் -கொன்றை மரங்கள் மேல் தூங்கும் பொன் நிறத்தை ஒத்த மஞ்சள் நிற  மாலைகளோடு சேர்ந்து நின்று நானும் உறங்குகின்றேன்
பூங்கொள் திருமுகத்து மடுத்து ஊதிய சங்கு ஒலியும் சார்ங்கவில் - பூப் போன்று மலர்ந்த  திருமுகத்தில் உள்ள பவள வாயில் ஊதிய சங்கு ஒலியும் சாரங்க வில்லின்
நாண் ஒலியும் தலைப் பெய்வது எஞ்ஞான்று கொலோ - நாண் ஒலியும் நான் கேட்பது எந்நாளோ ?

கோங்கு மரங்கள் பூத்து நிற்கும் திருமால் இருக்கும் சோலையில்
Image result for கோங்கு மரம்
கோங்கு மரப் பூ 


கொன்றை மரங்களின் மேல் சரம் சரமாகத் தொங்கும் பொன் நிறத்தை ஒத்த மஞ்சள் நிற மாலைகளோடு , மாலைகளாகச்  சேர்ந்து நானும் தூங்குகிறேன்.. பூப் போன்ற மலர்ந்தத் திருமுகத்தில் உள்ள பவள வாயில் அமிழ்த்தி ஊதிய சங்கு ஒலியும் சாரங்க வில்லின் நாண் ஒலியும் நான் கேட்கும் நாள்  எந்நாளோ ?

Image result
சரக்கொன்றை 
பார்க்கும் பொருட்களில் எல்லாம் திருமாலையே காண்பவள் , திருமாலின் மஞ்சள் உடை போன்ற   கொன்றை நிறப் பூமாலைகளும் ,கோங்கு மரப் பூக்களும் சூழ , தானும் தூங்குகின்றாள்..

எதற்காக அப்படி? சில நேரம் தலையணையைத் தலைவனாக நினைத்துக் கட்டிக் கொள்வதில்லையா ?
போலவே தலைவனின் உடையை நினைவூட்டும் இப்பூக்களை அருகில் வைத்துக் கொண்டு உறங்குவது அவனையே அணைத்து உறங்கும் ஆறுதலைத் தருகின்றது போலும்..


பூப்போன்று மலர்ந்த திருமுகத்தில் உள்ள பவள வாயில் ,  அமிழ்த்து ஊதிய சங்கொலியும் சாரங்க வில்லில் இருந்து எழும்பும் நாண் ஒலியும்,  தான் கேட்பது எந்நாளோ ?
சங்கொலியும் வில்லின் ஒலியும் கேட்டா அவன் வருவதாகப் பொருள்..அப்படி அவை அவன் வரவை ஒலிக்கும் நாள் எந்நாளோ ?


No comments:

Post a Comment

மறுமொழி இடுக!