Thursday 16 June 2016

49.சார்ங்கம் வளைய வலிக்கும் தடக்கைச்

49.சார்ங்கம் வளைய வலிக்கும் தடக்கைச் 
பாடல் :49
சார்ங்கம் வளைய வலிக்கும் தடக்கைச்
சதுரன் பொருத்த முடையன்
நாங்களெம் மில்லிருந் தொட்டிய கச்சங்கம்
நானு மவனு மறிதும்
தேங்கனி மாம்பொழில் செந்தளிர் கோதும்
சிறுகுயி லேதிரு மாலை
ஆங்கு விரைந்தொல்லை கூகிற்றி யாகில்
அவனைநான் செய்வன காணே

விளக்கம் :
சாரங்கம் வளைய வலிக்கும் தடக்கைச் சதுரன் பொருத்தம் உடையன் - வில்லை வளைத்து இழுக்கும் பலம் பொருந்திய கைகளை உடையவன்
நாங்கள் எம்மில் இருந்து ஒட்டிய கச்சங்கம் - நாங்கள் இருவரும் எங்களுக்குள் செய்து கொண்ட ரகசிய ஒப்பந்தம்
நானும் அவனும் அறிதும் - நானும் அவனும் மட்டுமே அறிவோம்
தேங்கனி மாம்பொழில் செந்தளிர் கோதும் சிறு குயிலே ! - இனிமையான கனிகள் நிறைந்த மாந்தோப்பிலே செம்மையான (சிவப்பான ) தளிர்களைக் கோதும் சிறிய குயிலே !
திருமாலை ஆங்கு விரைந்து ஒல்லை கூகிற்றி ஆகில் - திருமால் இருக்கும் இடம் சென்று அவரை என்னை விரைந்து   வந்து சேரக்  கூவுவாய் எனில்
அவனை நான் செய்வன காணே - அவனை நான் என்ன செய்யறேன்னு மட்டும் பாரு !

வில்லை இழுத்து வளைக்கும் பலம் பொருந்திய கைகளை உடையவன் ,அவனும் நானும் எங்களுக்குள் செய்து கொண்ட ஒப்பந்தம் நானும் அவனுமே அறிவோம். அது எங்களது அந்தரங்கம்:)   இனிமையான கனிகள் நிறைந்த மாந்தோப்பிலே செம்மையான தளிர்களைக் கோதும் சிறிய குயிலே !
என் திருமாலை நான் இருக்கும் இடத்துக்கு விரைந்து வர சீக்கிரம் சென்று நீ சொல்வாய் எனில் ,அவன் வந்த பிறகு நான் அவரை என்னவெல்லாம் செய்யப் போகின்றேன் என்று மட்டும் பார் !



Image result for lord sriram

என்னவர்,  வில்லை சும்மா வளைச்சுப் பிடிச்சா எப்படி இருக்கும் தெரியுமா..அப்படி நிற்பார்..அந்தக் கைகள் அவ்வளவு பலம் பொருந்தியவை....  எவரும் இல்லாத் தனிமையில் அப்படி என்ன இரகசியம் பேசினாளோ அப்பேர்ப்பட்ட காதலனோடு.. என்னதான் குயிலைத் தூது செல்லச்சொன்னாலும் அந்தரங்கம் சொல்ல மறுக்கிறாள் இவ்விடத்தில் :) திடீர்னு வெட்கம் வந்துடுச்சு போல :) செந்தளிரைத் தலை கோதுதாம் குயில்..   யாராவது சேட்டை செஞ்சா டேய்..என் கையில நீ சிக்கின என்ன பண்றேன் பாரு உன்ன..என்று மொழிவோம்..அது போலவே அழகாகச் சொல்கிறாள் கோதை :)
என் மச்சானைப் பார்த்தீங்களா..தேங்கனி மாந்தோப்புல ..குயிலக்கா கொஞ்சம் நீ பார்த்தா சொல்லு..அவர் வந்தாரா காணலியே அவர் வந்தாரா காணலியே 

No comments:

Post a Comment

மறுமொழி இடுக!