Monday 27 June 2016

54.நாளைவ துவைம ணமென்று நாளிட்டு

நாளைவ துவைம ணமென்று நாளிட்டு
பாடல் :54
நாளைவ துவைம ணமென்று நாளிட்டு
பாளைக முகுப ரிசுடைப் பந்தற்கீழ்
கோளரி மாதவன் கோவிந்த னென்பான்ஓர்
காளைபு குதக்க  னாக்கண்டேன் தோழீநான்

விளக்கம் :
நாளை வதுவை மணம் என்று நாளிட்டு - நாளைக்குத் திருமணம் என்று நாள் குறித்து
பாளை கமுகு பரிசுடைப் பந்தற்கீழ் - பாக்கு மரப் பட்டைகளால் அழகுறச்  செய்யப்பட்ட  மணப்பந்தலின் கீழ்
கோள் அரி  மாதவன் கோவிந்தன் என்பான் ஓர் - குறிப்பிட்ட அந்த நன்னாளில்  அழகு பொருந்திய  ஒளிமிக்க சிங்கம் போன்றவன் மாதவன் கோவிந்தன் என்ற பெயர் கொண்ட
காளை புகுதக் கனாக் கண்டேன் தோழீ நான் - காளை கம்பீரமாகப் புகுவதைப் போலக் கனாக் கண்டேன் தோழீ நான்

இந்தாங்கப்பா இதான் மாப்பிள்ளை நல்லாப் பார்த்துக்கிடுங்க..ரொம்பப் பெரிய இடம்..அதான் பட்டையக் கிளப்பற மாதிரி பந்தாவா தெருவெல்லாம் சுத்தி ஊரறிய பொண்ணு கேட்டு வந்துட்டாரு...


பெரியவங்க இனி என்ன பண்ணனும் திருமணத்துக்கு நாள் குறிக்கனும் .. அதைத்தான் கோதை சொல்றா..நாளைக்குத் திருமணம் என்று நாள் குறிச்சு ,அந்த நன்னாளிலே , பாக்குமரப் பட்டைகளால் அலங்கரிச்சு ,அழகான மணப் பந்தல் போட்டு அதன் கீழே அழகு பொருந்திய மிடுக்குடன் ,ஒளி பொருந்திய  சிங்கம் மாதிரி நரசிம்மன் ,மாதவன் கோவிந்தன் என்ற பெயர்களை உடைய காளை கம்பீரமாகப் புகுவது போன்று கனாக் கண்டேன் தோழீ என்கிறாள்.. காளைன்னா காளை இது சாதாரணக் காளை இல்ல சல்லிக்கட்டு காளை .. யாரும் அவ்ளோ எளிதாகக் கை வைத்து விட முடியாது :))





தன் மன்னன் மாயக் கண்ணன் மாப்பிள்ளையா வரும் அழகை அவள் மனசாரக் கண்டு அதை நம்மிடம் விவரிக்கிறாள்..தோரணம் கட்டினாப் போதுமா..மணப்பந்தல் தானே கல்யாண வீட்டுக்கான அடையாளம்..இன்னார் வீட்டுல கல்யாணம் என்று பறை சாற்றுவதே பந்தக்கால் தானே..தன்னை மணம் முடிக்க வரும் மணாளன்,  வரும் அழகே தனி..பாருங்கப்பா இந்தப் பொண்ணு எங்கயோ சன்னல்கிட்ட நின்னு மாப்பிள்ளை வாரத சைட் அடிச்சிருக்கு :)) 

No comments:

Post a Comment

மறுமொழி இடுக!