Wednesday 29 June 2016

55.இந்திர னுள்ளிட்ட தேவர்கு ழாமெல்லாம்

55.இந்திர னுள்ளிட்ட தேவர்கு ழாமெல்லாம்
பாடல் :55
இந்திர னுள்ளிட்ட தேவர்கு ழாமெல்லாம்
வந்திருந் தென்னைம கட்பேசி மந்திரித்து
மந்திரக் கோடியு டுத்திம ணமாலை
அந்தரி சூட்டக்க னாக்கண்டேன் தோழீநான்

விளக்கம் : 
இந்திரன் உள்ளிட்ட தேவர் குழாம் எல்லாம் - இந்திரன் உள்ளிட்ட முப்பத்து முக்கோடி  தேவர் கூட்டம்
வந்திருந்து என்னை மகள் பேசி மந்திரித்து - அனைவரும் வந்து விழாவைச் சிறப்பித்து  இதுதான் பெண் என்று பேசி முடிவு செய்து மந்திரம் சொல்லி
மந்திரக் கோடி உடுத்தி - மணப் பெண்ணுக்கு புதுத் துணி உடுத்தி
மணமாலை  அந்தரி சூட்டக் கனாக் கண்டேன் தோழீ நான் - மாதவனின் தங்கையான துர்க்கை  மணமாலையைச் சூட்டி விடக் கனாக் கண்டேன் தோழீ நான்



மாப்பிள்ளை பெரிய இடம்..சொந்தபந்தம்லாம் நிறைய..பத்தாததுக்கு பவர்புல் ஆள் வேற.. நட்பு ரீதியாகவும் பழகின ஆளுங்க வேற நிறைய..அவரோட திருமணத்துக்கு அவங்கல்லாம் இல்லாட்டி எப்படி..உலகளந்தான் திருமணத்திற்கு உலகமே அல்லோகல்லப்படாம எப்படி..? அதான் முப்பத்து முக்கோடி தேவர்களும் வந்துட்டாங்க . உறுதி செய்தலுக்கு  வந்து இருவீட்டார் சம்மதத்தின் பெயரில் இதுதான் பொண்ணு இதுதான் மாப்பிள்ளைன்னு பேசி


Image result for இந்திரன் உள்ளிட்ட

அவங்க நல்லபடியா வாழ மந்திரம்லாம் சொல்றாங்க . மாப்பிள்ளை வீட்ல இருந்து பொண்ணுக்கு புதுப் புடைவை எடுத்துக் கொடுக்கணும்ல அதுவும் நாத்தனார் கையால கொடுக்கறது தான முறை..அதான் அந்தரி என்ற துர்க்கை மூலமா அவங்க அண்ணியான கோதைக்குக் கொடுத்து உடுத்தி விடறாங்க..அவங்களே பொண்ணுக்கு மணமாலை சூட்டறாங்க..எல்லாம் முறைப்படி பண்ணியாகணும்..இதுல கோதை ரொம்ப ஸ்ட்ரிக்ட்டு ஸ்ட்ரிக்ட்டு  ஸ்ட்ரிக்ட்டு :)) ஆனாலும் இந்தத் திருமணங்களில் மாப்பிள்ளைக்குத் தங்கை நாத்தனார் செய்கின்ற அலப்பறைகள் இருக்கே..:) பொண்ணுக்கு எல்லாம் அவங்க கையால தான் கொடுப்பாங்க..தேங்காய் வெத்தலை பாக்கு வச்சு மடி மாத்தி விடுவாங்க...எவ்ளோ வேலை ஷப்பா... :)


No comments:

Post a Comment

மறுமொழி இடுக!