Tuesday 9 February 2016

13. குண்டு நீருறை கோளரீ

13. குண்டுநீருறை கோளரீ!
குண்டுநீருறை கோளரீ! மத
யானைகோள்விடுத் தாய்,உன்னைக்
கண்டுமாலுறு வோங்களைக்கடைக்
கண்களாலிட்டு வாதியேல்,
வண்டல்நுண்மணல் தெள்ளியாம்வளைக்
கைகளாற்சிர மப்பட்டோம்,
தெண்டிரைக் கடற்பள்ளியாய்! எங்கள்
சிற்றில்வந்து சிதையேலே

குண்டு நீர் உறை  கோள் அரி  ! - நீர் நிறைந்திருக்கும் மழைக் காலத்தில் சிங்கக்குட்டி போல் ஆலிலை மேல் துயின்று இருக்கும் அரியே
மத யானை கோள் விடுத்தாய் - முதலையிடம் சிக்கிய யானையைக் காப்பாற்றியவனே
உன்னைக் கண்டு மால் உறும் எங்களைக் - உன்னைக் கண்டு மயக்கமுறும் எங்களைக்
கடைக் கண்களாலிட்டு வாதியேல் - உன் முழுப் பார்வையும் தரிசனமும் வேண்டி நிற்கும் எங்களைக் கடைக் கண்களால் பார்த்துத் துன்புறுத்தாதே !
வண்டல் நுண்மணல் - வளமையான வழுவழுப்பான வண்டல் நுண் மணல் கொண்டு
தெள்ளியாம் வளைக் கைகளாற் சிரமப்பட்டோம் - அதையும் புடைத்து எமது வளையல் அணிந்த கரங்களால் கட்ட சிரமப் பட்டோம்
தெண்டிரைக்  கடற்பள்ளியாய் ! -அலை பாயும் கடல் மீது பள்ளி கொண்ட பெருமானே!
எங்கள் சிற்றில் வந்து சிதையலே ! - எங்களின் சிறிய வீட்டை வந்து சிதைக்காதே !

குண்டு நீர் உறை..எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு இந்தச் சொல்லாடல் :) மழைக்காலத்தில் அனைத்து நீர் நிலைகளும் தளும்பத் தளும்ப நிறைந்திருக்கும்..வறண்டு போய் இல்லாம , வற்றிச் சப்பிப் போகாம    நிறைந்து இருக்கும் நீர்நிலைகளை குண்டா இருக்கு என்கிறாள்..நிறைந்திருப்பதை :)  அந்த ஆழிக் காலத்தில் நீரில்  ஆல் இலை மேல் சிங்கம் போல் உறைந்துள்ள அரியே ! முதலையிடம் சிக்கிய மத ஆனையை சிங்கத்தின் சீற்றத்தோடு கிளர்ந்தெழுந்து காப்பாற்றியவனே!

நன்றி :கூகுள் 
உன்னைக் கண்டு மயங்கும் எங்களைக் கடைக் கண்களால் துன்புறுத்தாதே !
வண்டல் மண் என்பது ஆத்து மணல் கலந்த செம்மண்..செழுமையாக இருக்கும். நீர் சென்று கற்கள் அடித்துப் போய் வழுவழு என இருக்கும்.
வண்டல்மண் 

இந்த வண்டல் மண் மிக சத்து மிக்கதாம். இன்று வீடு கட்ட , பூச சிமின்ட் பயன்படுத்துவதற்குப் பதிலாக அக்காலத்தில் இந்த மண் கொண்டுதான் பூசுவார்களாம்.மிக உறுதியானதாக இருக்குமாம்.எங்கள் சொந்த வீடு அப்படிக் கட்டியது என்று எங்கள் அம்மா சொன்ன தகவல் இது.
அந்த வண்டல் மண்ணையும் ,அதையும் மிச்சசொச்ச கல் கசடு  நீக்கப் புடைச்சு இன்னும் நுண்ணிய மணலாக்கி எங்கள் வளைக்கரங்களால் சிரமப்பட்டு கட்டிய வீடு இது.


எங்களைக் கடைக் கண்களால் இட்டு வாதியேல்..என்ன இது கடவுளோட கடைக்கண் பார்வையே போதுமே நமக்கு.  இவுக என்னடான்னா  கடைக் கண்களால் இட்டு துன்புறுத்தாதே ன்னு சொல்லுறாக.. இந்த இடத்தில் குமட்டுல இடிச்சுகிட்டு செல்லம் கொஞ்சிச் சொல்றதா ஊடலோடு சொல்வதாக எடுத்துக் கொள்ளலாம்..ஆமா  நீ என்னை முழுசாப் பார்க்கணும் அதுவே என் ஆசை..அப்படி இருக்கிறப்ப எனக்கு இந்த ஓரக் கண் பார்வை வேணாம்ங்கறாங்க :)) எதுக்கு யாரோ ஒருத்தர் மாதிரி சைட்அடிச்சுகிட்டு..உரிமையானவன் நீ ..நின்று நேராகப் பார்..வேணாம்னா சொல்லிடப் போறேன் :))


பாற்கடலில் பள்ளி கொண்ட பெருமானே!எங்களின்இச்சிறு வீட்டைச் சிதைக்காதே !

கண்ணனுடன் உரிமையோடு உறவாடுகிறாள்..ஊடுகிறாள் ..பின் வேண்டுகிறாள் சிறுபிள்ளை கோதை..:) 





3 comments:

  1. Hmmm... Ovvoru variyilum kadhal thathumbugirathu..

    ReplyDelete
  2. பாடலை பிரித்து எழுதியது மிக நன்று. அது இல்லாம பாடலை வாசிக்கவே மிக கடினமா இருக்கு.

    ReplyDelete

மறுமொழி இடுக!