Wednesday 17 February 2016

19.முற்றத்தூடு புகுந்துநின்முகங்

19.முற்றத்தூடு புகுந்துநின்முகங் 
பாடல் :19
முற்றத்தூடு புகுந்துநின்முகங்
காட்டிப்புன்முறு வல்செய்து
சிற்றிலோடெங்கள் சிந்தையும்சிதைக்
கக்கடவையோ கோவிந்தா
முற்றமண்ணிடம் தாவிவிண்ணுற
நீண்டளந்துகொண் டாய்எம்மைப்
பற்றிமெய்ப்பிணக் கிட்டக்காலிந்தப்
பக்கம்நின்றவ ரெஞ்சொல்லார்

விளக்கம் : 
முற்றத்து ஊடு புகுந்து - முற்றத்திலே ஊடாகப் புகுந்து
நின் முகம் காட்டிப் புன்முறுவல் செய்து - உன் முகம் காட்டிப் புன்னகை செய்து
சிற்றிலோடு எங்கள் சிந்தையும் - எங்கள் சிறு மணல் வீட்டோடு எங்கள் சிந்தனையையும்
சிதைக்கக் கடவையோ கோவிந்தா - சிதைக்கும் கோவிந்தா
முற்ற மண்ணிடம் தாவி  - முழுவதுமாக மண் ,இடம் தாவி
விண்ணுற நீண்டு அளந்து கொண்டாய் - வானம் அளந்து கால் நீட்டி மொத்தமும் அளந்தாய்
எம்மைப்பற்றி மெய்ப்பிணக்கு இட்டக் கால் - எங்களைப்பற்றி (பிடித்து) உடல் மீது மல்லுக்கட்டி சண்டை இட்டால்
இந்தப் பக்கம் நின்று அவர் எஞ்சொல்லார் - இதைப் பார்க்கும் என் பக்கத்தார் (என் வீட்டார் ) என்ன சொல்வார்கள்?

முற்றத்தில் ஊடாக (இடையில்) புகுந்து உன் முகம் காட்டிப் புன்னகை செய்து எங்கள் சிறு மணல் வீட்டோடு எங்கள் சிந்தையையும் சிதைப்பாயோ கோவிந்தா ..
மண் முழுவதுமாக அளந்து ,பின் இடம் தாவி வானம் அளந்து கால் நீட்டி அதன் மொத்தமும் அளந்தாய்

நாங்க ஆசைப்பட்டு கட்டின வீட்டை இடிக்க நீ வர , அதை நாங்க தடுக்க முனைய, அதற்காக எங்களைப் பிடிச்சு கட்டி உருண்டு நீ சண்டை இட இச்சண்டையை நின்று வேடிக்கை பார்க்கற என் வீட்டார் (அல்லது சுற்றி நின்று வேடிக்கை பார்ப்பவர்கள் என்றும் கொள்ளலாம் ) இதைப் பார்த்தா என்ன சொல்வாங்க ?
Related image


பொதுவா ஆண் பிள்ளையோடு பெண் பிள்ளை சண்டை இட்டாலே ,  அவன் தான் ஆம்பளப் புள்ள நீயும் சரி மல்லுக்கு நிற்கறியே என்று என் அம்மா கூட திட்டுவார்கள்.. :) அது போலத்தான் ஆண்டாள் வீட்டிலும் திட்டினாங்களாம் :))

கண்ணன் காதலன் மட்டுமல்ல அவளோடு  செல்லச் சண்டை இடும் தோழனும் கூட :)


No comments:

Post a Comment

மறுமொழி இடுக!