Friday 12 February 2016

17.பேதநன்கறி வார்களோடிவை

17.பேதநன்கறி வார்களோடிவை 
பாடல் 17
பேதநன்கறி வார்களோடிவை
பேசினால்பெரி திஞ்சுவை
யாதுமொன்றறி யாதபிள்ளைக
ளோமைநீநலிந் தென்பயன்
ஓதமாகடல் வண்ணாஉன்மண
வாட்டிமாரொடு சூழறும்
சேதுபந்தம் திருத்தினாயெங்கள்
சிற்றில்வந்து சிதையேலே

விளக்கம் :
பேதம் நன்கு அறிவார்களோடு - பேச்சும் ஒன்றும் செயல் ஒன்றுமான உன் செயல்களுக்கு வித்தியாசம் நன்கு அறிந்தவர்களோடு
இவை பேசினால் பெரிதும் சுவை - இவை பேசினால் பெரிதும் சுவையானதாக இருக்கும்
யாதும் ஒன்று அறியாத - ஆனா இந்தச் சூதுவாது அறியாத
பிள்ளைகளோம் எமை நீ நலிந்து என்ன பயன் - பிள்ளைகளான எங்களை நீ துன்புறுத்தி என்ன பயன்
ஓதமா கடல்வண்ணா - அலை கொண்ட கடல் நிறத்தானே
உன் மணவாட்டிமாரொடு சூழறும் - உன் மனைவிகளின் மீது ஆணை
சேது பந்தம் திருத்தினாய் - அணை கட்டினாய்
எங்கள் சிற்றில் வந்து சிதையலே - எங்கள் சிறு வீட்டை வந்து சிதைக்காதே

உன் பேதம் நன்கு அறிவார்களோடு , உன் பேச்சுக்கும் செயலுக்கும் வித்தியாசம் அறிந்தவர்களோடு ,இதெல்லாம் பேசினா ரொம்பச் சுவையானதாக இருக்கும்..ஆனா எதுவும் ஒன்றும் விபரம் அறியாத  சிறு பிள்ளைகளான எங்களை நீ நலிந்து (மெலிதல் என்றும் பொருள் வரும் ஆனால் இவ்விடத்தில் துன்புறுத்தி ) கோபம் கொண்டு என்ன பயன் ?
நன்றி கூகுல் 
ஓதம் - கடல் அலை.. அலை கொண்ட கடலின் வண்ணா அக்கடலில் சேது - அணை பந்தம் - கட்டுதல் அணை கட்டினாய்..
நன்றி கூகுல்
 உன் மணவாட்டிகள் (மனைவியர் ) மீது ஆணை நீ எங்கள் சின்ன மணல் வீட்டை இடிக்கக் கூடாது..
நன்றி கூகுல் 

மீறி மீறிச் சேட்டை,  செய்கை செய்து கொண்டே இருக்கவும் இயல்பாக நாம் சொல்வோமே நீ மட்டும் ரோஷமுள்ள புள்ளையா இருந்தா இனிமே இதைச் செய்யக் கூடாது..அல்லது அப்பா மேல் ஆணை இதைப் பண்ணக் கூடாது..அது போல ஆண்டாள் ,கண்ணனின் மனைவியர் மீது ஆணை இனிமே சேட்டை பண்ணாதங்கறாங்க :)) தனது தர்ம பத்தினியை நிச்சயம் கண்ணன் மதிக்கக் கூடும் என்று நம்புகிறாள் இப்பேதைப் பெண் கோதை :)

நன்கு கவனித்தீர்களா ? ஆண்டாள் ஒரு அப்பட்டமான கிராமத்துப்பெண் ..பேச்சு வழக்கு இன்றளவும் நாம் பேசுவது போலத்தான் இருக்கு அவள் பாடல்கள்..அவள் இன்னும் மனசுக்கு நெருக்கமாக இதுவும் ஒரு காரணம் :)

No comments:

Post a Comment

மறுமொழி இடுக!