Friday 26 February 2016

25.காலைக் கதுவிடு கின்ற

25.காலைக் கதுவிடு கின்ற 
பாடல் : 25
காலைக் கதுவிடு கின்ற
கயலோடு வாளை விரவி
வேலைப் பிடித்தெந்னை மார்கள்
ஓட்டிலென் னவிளை யாட்டோ
கோலச்சிற் றாடை பலவுங்
கொண்டுநீ யேறி யிராதே
கோலங் கரிய பிரானே
குருந்திடைக் கூறை பணியாய்

விளக்கம் : 

காலைக் கதுவிடுகின்ற - கால்களைப் பற்றுகின்ற
கயலோடு வாளை விரவி - கயல் மீன்களோடு வாளை மீனும் ஒன்று கூடி
வேலைப் பிடித்து எந்தென் ஐ  மார்கள் - வேல் பிடித்துக்கொண்டு என் தந்தை /தலைவன்/அண்ணன்  மார்
ஓட்டில் என்ன விளையாட்டோ ? - உன்னை ஓட விட்டுத் துரத்தினா என்ன பண்றது? இது என்ன விளையாட்டோ ?
கோலச் சிற்றாடை பலவுங் கொண்டு - அழகிய சிற்றாடைகள் பலவற்றையும் எடுத்துக் கொண்டு
நீ ஏறி இராதே - நீ மரத்தின் மீது ஏறி உட்கார்ந்துக்காதே
கோலங் கரிய பிரானே - கரிய திருமேனி கொண்ட அழகிய பிரானே
குருந்திடைக் கூறை பணியாய் - குருந்த மரத்தின் இடையில் வைத்திருக்கும் எங்கள் ஆடையைத் தந்து விடு

கதுவுதல் -  பற்றுதல்/ பிளத்தல்  ஆடை இல்லாமல் நீரிலேயே வெகு நேரம் நின்றதால் மீன்களானது கால்களை வந்து பற்றுதாம்..நிமிண்டுதாம் :) கயல் மீன்களோடு ,வாளை மீனும் ஒன்றாக் கூடி காலை வந்து பிடிக்குதாம்
எந்தன் ஐ மார்கள் - ஐ என்றால் தலைவன் /தந்தை/ மூத்தவன்/அரசன் .பொம்பளைப் பிள்ளைங்க குளிக்கிற இடத்தில இப்படி வந்து சேட்டை பண்றதை பெண் வீட்டு தந்தை/அக்குடும்பத் தலைவன் /அண்ணன் மார்கள் பார்த்துட்டா வேலை எடுத்துகிட்டு அடிக்க வருவாங்க. அதைப் பார்த்துட்டு நீ ஓடணும் அவங்க விரட்டினா நல்லாவா இருக்கும். இது என்ன விளையாட்டு? (என் குடும்பத்தைச் சேர்ந்த ஆண்மகன்கள் வந்துருவாங்க என்ற மிரட்டலும் , வந்துட்டா கண்ணனுக்கு என்னவாகுமோ என்ற பதட்டமும் ஒரு சேரச் சொல்றாங்க பாருங்க அதான் காதல் )



அழகிய எங்கள் சிறிய ஆடைகள் பலவற்றையும் நீ எடுத்துக் கொண்டு, மரத்தின் மீது ஏறி அமர்ந்து கொள்ளாதே.
கோலம் என்பது நாம் மணல் கொண்டு போடும் கோலத்தையும் குறிக்கும். நமது வெளித்தோற்றத்தையும் (உருவத்தையும் குறிக்கும் ) அழகு எனவும் பொருள் படும். கோலங்கரிய பிரானே என்றால் அழகிய /கருப்பான திருமேனி கொண்ட பிரானே என்றும் பொருள்.


குருந்த மரத்தின் கிளைகளின் இடையே வைத்திருக்கும் எங்கள் துணியைத் தந்துவிடு ! 

No comments:

Post a Comment

மறுமொழி இடுக!