Monday 22 February 2016

22.இதுவென் புகுந்ததிங் கந்தோ !

22. இதுவென் புகுந்ததிங் கந்தோ 
பாடல் : 22
இதுவென் புகுந்ததிங் கந்தோ !
இப்பொய்கைக் கெவ்வாறு வந்தாய்
மதுவின் துழாய்முடி மாலே
மாயனே எங்க ளமுதே
விதியின்மை யாலது மாட்டோம்
வித்தகப் பிள்ளாய் விரையேல்
குதிகொண் டரவில் நடித்தாய்
குருந்திடைக் கூறை பணியாய்

விளக்கம் : 

இது என்ன புகுந்தது இங்கு  - இது என்ன புகுந்தது இங்கு ?
அந்தோ! இப்பொய்கைக்கு எவ்வாறு வந்தாய்-  அந்தோ!இந்தப் பொய்கைக்கு (குளத்துக்கு எவ்வாறு வந்தாய் ?
மதுவின் துழாய்முடி மாலே - தேன் ததும்பும் துளசி மலர்கள் , முடியில் சூடிய மாலே
மாயனே - கருப்பனே , (மாயங்கள் செய்பவனே )
எங்கள் அமுதே - எங்கள் அமுதே
விதி இன்மையால் அது மாட்டோம் - பெண் உடைகள் அணியாமல் ஆண்கள் முன் வருதல் விதி இல்லை அதை நாங்கள் செய்ய மாட்டோம்
வித்தகப் பிள்ளாய் - பல் திறமை பெற்ற வல்லவனே
விரையேல் - உடை இல்லாம இருக்கோம் அவசரப்பட்டு வந்துடாத
குதி கொண்டு அரவில் நடித்தாய் - உன் குதிகால் கொண்டு பாம்பின் மீது நடனம் ஆடியவனே
குருந்து இடைக் கூறை பணியாய் - குருந்த மரத்தின் இடையே வைத்திருக்கும் எம் துணிகளை கொடுத்து விட்டுப் போ.

அதிர்ச்சியா கேட்கறாங்க..அட இது என்ன புகுந்தது இங்கு ?
அந்தோ ! நீ எப்படி இந்தக் குளத்துக்கு  வந்த ? (உணர்ச்சி வாக்கியம் ) தேன் ததும்பும் துளசிகள் சூடிய முடி கொண்ட மாலே ! மாயனே  (கருப்பனே ) மாயங்கள் செய்பவனே !

எங்கள் அமுதே! (நைச்சியமா பேசி துணி வாங்கப் பார்க்கிறார்கள் . என் செல்லம்ல  கன்னுக்குட்டில என்று நம் காரியம் சாதிக்க குழந்தையைக் கொஞ்சுவோமே அது போல ) உடை இன்றிப் பெண்கள் ஆண் முன்னால் வர இயலுமா ? அப்படி எந்த விதியும் இல்லையே. அதனால் அதை நாங்கள் செய்ய மாட்டோம்.
பல் திறமை பெற்ற வல்லவனே ! எங்களிடம் உடை இல்லை அவசரப்பட்டு வந்துடாத!


உன் குதிகால் கொண்டு பாம்பின் மீது நடனம் ஆடினாய் ! குருந்த மரத்தின் இடையேவைத்திருக்கும் எங்கள் துணிகளைக் கொடுத்து விடு.
குருந்த மரம் 
குருந்த மரம் பற்றி அகராதியில் படித்த பொழுது அது காட்டு எலுமிச்சை வகை எனச் சொல்லியது. அது ஒரு சிறுவகை மரம் .இது குளத்தின் அருகே வேர்பிடிச்சு மண் அரிக்காமல் இருக்க இந்த மரம் உதவுமாம் (நல்ல தகவல் இல்ல ?) 

பாருங்க இந்த கண்ணனின் குறும்பை ..பெண்களை எப்படித் தவிக்க விட்டு ரசிக்கிறார்..பெரிய காதல் மன்னன் :) 





No comments:

Post a Comment

மறுமொழி இடுக!