Sunday 4 December 2016

104.தாமுகக்கும் தம்கையில் சங்கமே

104.தாமுகக்கும் தம்கையில் சங்கமே 

பதினோராம் திருமொழி இனிதே ஆரம்பம் :)  இந்தத் திருமொழி முழுவதும் திருவரங்கனுக்கே அர்ப்பணம் .

பாடல் :104
தாமுகக்கும் தம்கையில் சங்கமே போலாவோ
யாமுகக்கு மெங்கையில் சங்கமு மேந்திழையீர்
தீமுகத்து நாகணைமேல் சேரும் திருவரங்கர்
ஆமுகத்தை நோக்காரால் அம்மனே அம்மனே

விளக்கம் :

தாம் உகக்கும் தம் கையில் சங்கமே போலாவோ - தாம் விரும்பி தனது கையில் கொண்டுள்ள  சங்கு போல் ஆகுமோ
யாம் முகக்கும் என் கையில் சங்கமும் ஏந்திழையீர் - நான் விரும்பி என் கையில் அணிந்துள்ள சங்குவளை ? சொல்லுங்கள் சிறந்த அணிகலன்களை அணிந்த பெண்களே !
தீமுகத்து நாகணை மேல் சேரும் திருவரங்கர் - தீ கக்கும் முகம் கொண்ட நாகத்தினை அணைந்து அதன் மேல் படுத்திருக்கும் திருவரங்கர்
ஆ முகத்தை நோக்காரால் அம்மனே அம்மனே - என் முகத்தைப் பார்க்க மாட்டாரோ ?  ஆ..அம்மா அம்மா

ஏந்திழையீர் - சிறந்த அணிகலன்களை அணிந்த பெண்
உகந்து - விரும்பி

சிறந்த அணிகலன்களை அணிந்திருக்கும் பெண்களே !
தாம் விரும்பி,  தமது கையிலே சங்கு வைத்திருக்கிறாரே அவர் அதைப் போலாகுமோ நான் விரும்பி அணிந்திருக்கும் இந்தச் சங்கு வளையல் ?( இன்னமும் குமரி போன்ற கடற்புற மாவட்டங்களுக்குச் சென்றால் சங்கினால் செய்யப்பட ஆபரணங்களைக் காணலாம் )
Related image

தீயினைக் கக்கும் முகம் கொண்ட நாகத்தினை அணைத்தாற்போல் அதன் மேல் துயிலும் திருவரங்கர் பெருமானார் என் முகத்தைப் பார்க்க மாட்டாரோ ..ஆ !(வேதனையில் சொல்லுவது ) வலி வந்தாலே சட்டுன்னு அனிச்சை செயலாக அம்மாவைத் தானே அழைப்போம்..இந்த ஏந்திழையீரை இவள் தாயாக நினைத்து தன் வேதனையைச் சொல்கிறாள்..ஆ..அம்மா அம்மா..வலிக்கிறதே எனக்குப் பாராமுகமாய் இருக்கின்றாரே
Image result

சங்கு வளை அணிந்த பெண்ணின் கையைப் பிடிப்பதை விட்டுவிட்டு வெறும் சங்கைப் பிடித்துக் கொண்டிருக்கிறார்..க்கும் ..ஏற்கனவே கருப்பூரம் நாறுமோ கமலப்பூ நாறுமோ திருப்பவள வாய் தான் தித்தித்து இருக்குமோ விருப்புற்றுக் கேட்கிறேன் சொல்லாழி வெண் சங்கே ன்னு கேட்டவள் தானே இவள்..நீ ஒருத்தனா அவரது வாயமுதம் பருகுகிறாய் என்று பொறாமையில் புகைந்தவள் தானே..இன்று தோழியிடம் கேட்கிறாள்..அந்த சங்கு போல இருக்குதா என் சங்கு வளையல்..(ஒருவேளை ஒரே மாதிரி இருந்தா பிடிக்கத் தோதா இருக்கும்ல அப்புறம் அதற்குப் பதில் இதைப் பிடிச்சா என்னன்னு கேட்கலாம்ல அதுக்குத்தான் இந்தக் கேள்விலாம் வருது இவளுக்கு :)
அது ஏன் சிறந்த அணிகலன்கள் அணிஞ்சவங்களக் கேட்கணும்..அவங்கதான் சரியா தீர்ப்புச் சொல்வாங்க  (அதாவது அவளுக்குச் சாதகமா வந்தா அது சரி :)) )
நானும்தான் சங்கு வளையல் போட்டிருக்கேன்..அந்தச் சங்கை விட்டுட்டு இதைப் பிடிக்கலாமே மாமு  :))






No comments:

Post a Comment

மறுமொழி இடுக!