Thursday 1 December 2016

102.கடலே கடலே உன்னைக் கடைந்து

102.கடலே கடலே உன்னைக் கடைந்து கலக்குறுத்து
பாடல் :102
கடலே கடலே உன்னைக் கடைந்து கலக்குறுத்து
உடலுள் புகுந்துநின் றூறல் அறுத்தவற்கு என்னையும்
உடலுள் புகுந்துநின் றூறல் அறுக்கின்ற மாயற்குஎன்
நடலைக ளெல்லாம் நாகணைக் கேசென்று ரைத்தியே

விளக்கம் :
கடலே கடலே உன்னைக் கடைந்து கலக்கி உறுத்து - கடலே கடலே உன்னைக் கடைந்து கலக்கி உறுத்தி உன்
உடலுள் புகுந்து நின்று ஊறல் அறுத்தவற்கு உடலில் புகுந்து நின்று உன் செல்வமான அமுதத்தை அறுத்தவருக்கு
என்னையும் உடலுள் புகுந்து நின்று ஊறல் அறுக்கின்ற மாயற்கு - என்னையும் என் உடலில் புகுந்து நின்று என் உயிரை அறுக்கின்ற மாயனுக்கு
என் நடலைகள் எல்லாம் நாக அணைக்கே சென்று உரைத்தியே  - என் கற்பனை வாழ்வும்  /துன்பங்கள் எல்லாம் நாகத்தை அணைத்தவனிடமே   சென்று உரைப்பாயாக!

உயிரை அப்படியே உருவி எடுத்துட்ட என்ற சொல்லாடல் உண்டு..அதைத்தான் இங்கு சொல்கிறாள் ஆண்டாளும் . கடலே கடலே .. தேவர்களுக்காக   உன்னைக் கடைந்து கலக்கி அழுத்தி உன் உடலினுள் புகுந்து நின்று உன் அமுதத்தை அறுத்தவருக்கு ,

Image result

போலவே என்னையும் என் உடலினுள் புகுந்து என் உயிரை அறுத்த அந்த மாயோனுக்கு என் துன்பங்களை எல்லாம் நாகத்தை அணைத்தவனிடமே சென்று உரைப்பாயாக !
Image result
ஓவியம் -சண்முகவேல் 
நடலை என்பதற்குப் பல பொருள்..ஒருவித கற்பனை வாழ்வில் வாழ்வது, துன்பம் (நடலை நோய் ) .இவனே கணவன் என்று ஒரு கற்பனை வாழ்ந்து கொண்டு தீராத் துன்பத்தை அனுபவித்துக் கொண்டிருக்கிறாள் ..கடலை உருவி அமுதெடுத்தவன் தன் உடலினுள் புகுந்து உயிர் எடுத்தவன் என்று குற்றம் சாற்றுகிறாள் அவனிடமே போய்ச் சொல்லு அவனால்தான் இத்துன்பம் . இத்துன்பத்துக்கு மருந்தும் அவனே என்று போய்ச் சொல்லு 

No comments:

Post a Comment

மறுமொழி இடுக!