Thursday 8 December 2016

105.எழிலுடைய வம்மனைமீர்

105.எழிலுடைய வம்மனைமீர் 
பாடல் : 105
எழிலுடைய வம்மனைமீர் என்னரங்கத் தின்னமுதர்
குழலழகர் வாயழகர் கண்ணழகர் கொப்பூழில்
எழுகமலப் பூவழக ரெம்மானார் என்னுடைய
கழல்வளையைத் தாமும் கழல்வளையே யாக்கினரே

விளக்கம் :
எழில் உடைய அம்மனைமீர் என் அரங்கத்தின் இன்அமுதர் - அழகுமிக்க தாய்மார்களே ! என் அரங்கத்தின் இனிமையான  அமுதர்
குழல் அழகர் வாய் அழகர் கண் அழகர் - முடி அழகர் வாய் அழகர் கண் அழகர்
கொப்பூழில்  எழுகமலப் பூவழகர் எம்மானார் - தனது தொப்புளில் இருந்து எழுந்த தாமரைப் பூ கொண்ட  அழகர் எம் தலைவர்
என்னுடைய  கழல்வளையைத் தாமும் கழல் வளையே ஆக்கினரே - என்னுடைய கழல்வளையலைத் தாமும் என் கைகளில் இருந்து கழல்கின்ற வளையல் ஆக்கினரே

அழகுமிக்க தாய்மார்களே !என் அரங்கத்தின் இனிமையான அமுதர் ,முடி அழகர் ,வாய் அழகர் கண் அழகர் தனது தொப்புளில் இருந்து எழும் தாமரைப் பூ கொண்ட  அழகர் அப்படியான என் தலைவர் என்னுடைய கழல்வளையலைத்  (வளையல்களில்  ஒருவகை வளையல்  ) தாமும் என் கைகளில் கழல்கின்ற (கழன்று /நெகிழ்ந்து ) விழுகின்ற வளையல் ஆக்கி விட்டாரே
Image result


பொதுவாகக் குழந்தையைக் கொஞ்சும்போது என் கண்ணு மூக்கு என் வாய் என் தங்கம் என் செல்லம் எனக் கொஞ்சுவோம் இல்லையா..அது போலத்தான் உச்சந்தலையில் இருந்து அவரை ரசிக்கின்றாள்.. பாரேன் அவர் முடி எவ்ளோ அழகு.. வாய் இருக்கே செக்கச் செவேல்ன்னு பவளம் போல இருக்கும் .கண் அன்றலர்ந்த செந்தாமரை போல இருக்கும்.. அவர் இனிமையானவர் ..என் தலைவர் ..என் வளையல்களைத்  தாமாக கழன்று விழும்படி ஆக்கிட்டாரே..
அவர் வந்து சேராத வேதனை இருப்பினும் அவரைத் திட்ட மனம் இன்றி கொஞ்சிக் கொள்கிறாள்..அந்தப் பெண்களிடம் விட்டுக் கொடுக்கவும் மனமில்லாம இனிமையானவர் என்றும் கூறி விட்டாள். அவரே எம் தலைவர் என்று உரைத்து விட்டாள்.. அவரையே நினைத்து வேதனைப்பட்டதில் உடல் மெலிந்து கை வளையல் நெகிழ்ந்து கழன்று விழுந்தோடி விட்டது .. அதற்குக்காரணம் அவரே ..அவரே இப்படிச் செய்துட்டாரே..
அம்மா அவரைப் பிழையா நினைச்சுடக் கூடாது..அதே நேரம் தனது வேதனையையும் சொல்லணும்..

தாயே..பார் இவள் படும் பாடு !

No comments:

Post a Comment

மறுமொழி இடுக!