Saturday 17 December 2016

109.கைப்பொருள்கள் முன்னமே கைக்கொண்டார்

109.கைப்பொருள்கள் முன்னமே கைக்கொண்டார் 
பாடல் :109

கைப்பொருள்கள் முன்னமே கைக்கொண்டார் காவிரிநீர்
செய்ப்புரள வோடும் திருவரங்கச் செல்வனார்
எப்பொருட்கும் நின்றார்க்கு மெய்தாது நான்மறையின்
சொற்பொருளாய் நின்றாரென் மெய்ப்பொருளும் கொண்டாரே

விளக்கம் :
கைப்பொருள்கள் முன்னமே கைக்கொண்டார் - என் கையிலிருந்த அனைத்துப் பொருட்களையும் முன்னமே தான் கைப்பற்றிக் கொண்டார்
காவிரி நீர் செய்ப் புரள ஓடும் திருவரங்கச் செல்வனார் - காவிரி நீர் நன் செய்  எனப்படும் விளை நிலங்களில் எல்லாம் புரண்டு ஓடும் திருவரங்கச் செல்வனார்
எப்பொருட்கும்நின்ற யாருக்கும் எய்தாது நான் மறையின் - எல்லாப் பொருட்களிலும் உள் நின்று எவருக்கும் கிட்டாது நான்கு மறையின்
சொற்பொருளாய் நின்றார் என் மெய்ப்பொருளும் கொண்டாரே - சொற்பொருளாய் நின்றார் அவரே என் உடலையும் கொள்ளை  கொண்டாரே

ஏற்கனவே ஒன்றுமில்லாத என்னிடம் இருந்த கொஞ்ச நஞ்ச கைப்பொருட்களையும் பிடிங்கிக் கொண்டார் ..
எவர்? வேற யாரு..  காவிரி நீர் அனைத்து நஞ்சை  நிலங்களில் புரள ஓடும் அந்தத் திருவரங்கச் செல்வனார் தான்..
(நன்செய் நிலங்கள் ஆறு முதலிய நீராதாரங்கள் இருப்பது )
அனைத்துப் பொருட்களிலும் உள் நின்று எவருக்கும் எட்டாத உயரத்தில் நிற்பவர் நான்கு மறையின் சொற்பொருளாய் நின்றவர் என் உடலையும் கொள்ளை கொண்டாரே
நான் மறையின் உட்பொருள் ஓம் -ஓம் என்பது அடியவருக்கும் அரங்கனுக்குமான உறவு .இப்படி எனக்கு உறவானவர் மறை மெய்ப்பொருளோடு என் மெய்ப்பொருளும் கொண்டாரே .
Image result for arts of ilayaraja
ஓவியம் இளையராஜா 



பொன்னு விளையுற நிலம் ஐயா உமது நிலம்..பின்ன காவிரி   அனைத்து  நன்செய்நிலங்களிலும் புரண்டு ஓடுதே..எப்பேர்ப்பட்ட பணக்காரன் நீ..ஆனாலும் நீ என்னாங்குற...இந்த எளியவளிடம் இருக்கும் கைப் பொருட்களை  எல்லாம் கைப்பற்றி வச்சுக்கிட்ட..இப்ப என்னடான்னா என் உடலையும் கொள்ளை கொள்வாய் போலவே ..
வருத்தமா சொல்ற மாதிரி இருக்குல்ல ஆனா அவளுக்கும் வேறென்ன ஆசை..அந்த அரங்கன் வந்து ஆசை தீர அணைக்கணும்ன்னு தான..இப்ப எதுக்கு என் உடலைக் கொள்ளை கொண்டார்னு குற்றம்சாட்டுகிறாள் . உடல் பொருள் ஆவி எல்லாம் உமக்குத்தான் ஐயா..அதிலே சிறு மாற்றம் கூட இல்லை..ஆனா தனியா கிடந்து உன் பிரிவால் அது போகக்கூடாது ..நீ அருகிருந்து அனைத்தையும் அணைத்து எடுத்துக் கொள்..நீ என்னக் கேட்பது நானே தருவேன்.. :) இப்படித் தவிக்க விட்டு உன் பிரிவால் உடல் நலிந்து கெடுவது நியாயம் தானா? ஒரு அரசனானவன் அவனையே நம்பி இருக்கும் குடியானவளுக்கு இதைச் செய்யலாமா ? வேற யாராவது என்னைத் துன்புறுத்தினால் நான் உன்னிடம் வந்து முறையிடுவேன்..நீயே என்னைத் துன்புறுத்தினால் அடியேன் எங்கு செல்வேன் ஐயா.. ?

No comments:

Post a Comment

மறுமொழி இடுக!