Tuesday 10 January 2017

125.பாலா லிலையில் துயில்கொண்ட

125.பாலா லிலையில் துயில்கொண்ட 
பாடல் :125
பாலா லிலையில் துயில்கொண்ட
பரமன் வலைப்பட் டிருந்தேனை
வேலால் துன்னம் பெய்தாற்போல்
வேண்டிற் றெல்லாம் பேசாதே
கோலால் நிரைமேய்த் தாயனாய்க்
குடந்தைக் கிடந்த குடமாடி
நீலார் தண்ணந் துழாய்கொண்டென்
நெறி மென்  குழல்மேல் சூட்டீரே

விளக்கம் :

பால் ஆல் இலையில் துயில் கொண்ட  - பால் உள்ள ஆல் இலையில் உறக்கம் கொண்ட
பரமன் வலைப்பட்டு இருந்தேனை - பரமனிடம் அன்புற்று அந்த வலையில் இருந்தவளை
வேலால் துன்னம் பெய்தாற்போல் - வேலால் துளை செய்தது போல
வேண்டிற்று எல்லாம் பேசாதே - உங்களுக்கு வேண்டியது (வாய்க்கு வந்தது எல்லாம் ) பேசாமல்
கோலால் நிரை மேய்த் தாயனாய்க் - தடி கொண்டு பசு மேய்த்த  ஆயனாய்
குடந்தைக் கிடந்த குடம் ஆடி - திருக்குடந்தையில் கிடந்த கோலத்தில் குடம் ஆடிய குடக் கூத்தன்
 நீல் ஆர் தண் அம் துழாய் கொண்டு -கருத்த அழகிய குளிர்ந்த துளசி கொண்டு (கருந்துளசி )
நெறி மென்  குழல் மேல் சூட்டீரே - அடர்ந்த மென்மையான என் கூந்தல் மீது சூட்டி விடுங்கள்

பால் உள்ள ஆல் (ஆலமரத்து இலை ) இலை மீது துயின்ற கண்ணன் மீது அன்பு கொண்டு அந்தக் காதல் வலையிலேயே அகப்பட்டு இருந்த என்னை (அந்த வலையில் இருந்து வெளியே வர விரும்பாதவள் என்றும் சொல்லலாம் )

Image result for ஆல் இலை கண்ணன்

புண் உள்ள நெஞ்சில் வேல் கொண்டு துளையிடுவது போல (வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சுவது போல  ) உங்க வாய்க்கு வந்தபடி எல்லாம் பேசாமல்
(பேசத் தான செய்வாங்க ஒரு பெண் பிள்ளை பிடிவாதமாக கண்ணன் ஒருவனை மட்டுமே நினைந்து நினைந்து உருகி வேறு சிந்தையற்றுக் கிடந்தால் :( ) தடி கொண்டு பசுக்கள் மேய்த்த (பசு மேய்க்கும் பொழுது தடி இருக்கும் கையில் ) ஆயனாய் (மாடு மேய்ப்பவன் )
Image result for திருக்குடந்தை   ஆராவமுதன்
திருக்குடந்தை 

திருக்குடந்தையில் கிடந்த கோலத்தில் இருக்கும் குடம் ஆடியவன் (பண்டைய  தமிழகத்தில் மிகப் பிரபலமானது குடக் கூத்து )



கருந்துளசி 
நீல் இதற்கு நீலம் /கருநிறம் என்ற இரண்டு பொருள்கள் உள்ளன..இதைக் கருமை என எடுத்தாண்டு இருக்கின்றேன்..ஏனெனில் கிருஷ்ண துளசி எனப்படும் கருந்துளசி சற்றே கருப்பு நிறம் கொண்டது..
திருக்குடந்தையில் கிடந்த கோலத்தில் உள்ள குடம் ஆடி, அவனின்   கருமை நிற அழகிய குளிர்ந்த துளசி கொண்டு என் அடர்ந்த அதே நேரம் மென்மையான குழல் மீது சூட்டுங்கள்..இதனால் என் வேதனை தீரும் !

No comments:

Post a Comment

மறுமொழி இடுக!