Tuesday 31 January 2017

138.மாத வன்என் மணியினை

138.மாத வன்என் மணியினை
பாடல் : 138
மாத வன்என் மணியினை
வலையில் பிழைத்த பன்றிபோல்
ஏது மொன்றும் கொளத்தாரா
ஈசன் றன்னைக் கண்டீரே
பீதக வாடை யுடைதாழப்
பெருங்கார் மேகக் கன்றேபோல்
வீதி யார வருவானை
விருந்தா வனத்தே கண்டோமே

விளக்கம் :
மாதவன் என் மணியினை - மாதவன் என் மணியினை
வலையில் பிழைத்த பன்றி போல் - வலையில் இருந்து தப்பிப் பிழைத்த பன்றி போல்
ஏதும் ஒன்றும் கொளத் தாரா - ஏதும் ஒன்றும் நாம்  கொள்ள , கைக்குப் பிடி தாராமல் செல்லும்
ஈசன் தன்னைக் கண்டீரே ? - இறைவனைக் கண்டீர்களா ?
பீதக வாடை உடை தாழப் -தனது மஞ்சள்  பட்டாடை தாழப்
பெரும் கார் மேகக் கன்றே போல் - பெரும் கார் மேகக் கன்று போல
வீதியார வருவானை - வீதியில் நிறைந்து வருவானை
விருந்தா வனத்தே கண்டோமே - விருந்தாவனத்தே கண்டோமே

கேள்வி : 
மாதவன் என் மணியினை (முதலில் கொஞ்சிவிட்டாள்  என் மணி என்று )
வலையில் இருந்து தப்பிப் பிழைத்த பன்றி போல் (ஆகா எப்பேர்ப்பட்ட இறைவன் அவனைப் போய் பன்றி என்கிறாள் இந்தப் பெண். எதற்காக பன்றியுடன் ஒப்பிடுகிறாள் ?  பன்றி என்ன செய்யுமாம்..என்னதான் ஆசை ஆசையாய்  வளர்த்தாலும் சாக்கடையில் சென்றுதான் புரளும்..
 பன்றி எப்படி வளர்ப்பார்கள் அது என்ன செய்யும் என்று   அறிந்து வைத்திருக்கின்றாள் . வலை வைத்தே பிடிப்பார்கள் பன்றியை.. ஆனாலும் அதிலும் தப்பித்து சாக்கடைக்கு ஓடும் அதைப் போலவே இவளின் காதல் வலையில் வீழாமல் அதன் நன்மை புரியாமல் தப்பித்து ஓடுகின்றான் கண்ணன்..
Image result for black krishna images


என்னடா..இவள் எப்படி சாக்கடையில் புரளும்  பன்றியோடு ஒப்பிடப் போச்சு..என்று சண்டைக்கு வராதீர்கள்..  . அவளுக்கு எல்லா உரிமையும் இருக்கு.. பன்றி வளர்க்கும் மனிதர்களை ஒதுக்கி வைக்கும் முன்னர் நாம் வணங்கும் இறைவனும் அந்தப் பன்றி அவதாரம் எடுத்தவர் தான் அந்தக் கண்ணன் என்பதை மனத்தில் வையுங்கள்.. பன்றி வளர்ப்பவர்களுக்கு அது செல்லப்பிராணி தானே..அதுவும் ஒரு வீட்டு விலங்கு தானே ..
பெரியாழ்வார் வீட்டில் வளர்ந்தவளுக்கு பன்றி வளர்ப்பு தெரிந்திருக்கிறது எருமை பற்றித் தெரிந்திருக்கிறது ( எருமைச் சிறு வீடு காண் - திருப்பாவை -8)
ஆமா ஆயர்பாடிச் சிறுமிகள் யாம் என்றும் ஒத்துக் கொள்கிறாள்..அதாவது மாடு மேய்க்கிறவள் தாம் உன்னைப் போலவே என்கிறாள் - திருப்பாவை 28)

சரி பாடலுக்குள் வருவோம்..
இப்படி கோதையின் காதலில் இருந்து தப்பிச் சென்றவன் ,கைக்கு எட்ட மறுக்கிறான் (பிடி கொடுக்க மறுக்கிறான் )  விடாமல் தப்பிச் சென்று கொண்டே இருக்கும் என் இறைவனை நீங்கள் கண்டீர்களா ?
Image result for black krishna images


பதில் : ஆம் !மஞ்சள் பட்டாடை உடை தாழ , பெரும் கருத்த மேகக் கன்று போல் (உருவம் கருமை அதை மேகத்தோடு ஒப்பிடுகிறாள் ) வீதியார...(நாம் சொல்வோமே..மனதார..மனம் முழுக்க நிறைஞ்சு துளி கூட வேறு நினையாமல் ஒப்புக்கொள்வது ) அது போல வீதியில் அவன் வருவது கண் கொள்ளாக் காட்சி வீதியார வந்தான் அந்த விருந்தாவனத்தில்..அங்கே கண்டோம்

No comments:

Post a Comment

மறுமொழி இடுக!